(3339)
உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,
மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே,
செறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள்
குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.
பதவுரை
|
எத்தேவும் |
– |
எல்லாத் தேவதைகளும் |
|
எ உலகங்களும் |
– |
எல்லாவுலகங்களும் |
|
மற்றும் |
– |
மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய |
|
இத்தனையும் |
– |
இவையடங்கலும் |
|
தன் பால் |
– |
தன்னுடையதான |
|
மறு இல் மூர்த்தியோடு ஒத்து |
– |
நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி) |
|
நின்ற வண்ணம் நிற்க |
– |
குறையற நிற்குமிருப்பிலே |
|
செறுவில் |
– |
விளை நிலங்களில் |
|
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களும் |
|
கரும்பொடு |
– |
கருப்பஞ்சோலைகளும் |
|
ஓங்கு |
– |
வளரும்படியான |
|
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே |
|
குறிய மாண் உரு ஆகிய |
– |
வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும் |
|
நீள் குடக் கூத்தனுக்கு |
– |
(க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு |
|
ஆள் செய்வதே |
– |
அடிமை செய்வதே |
|
உறுவது ஆவது உற்றதாம்.- |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளின பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமைசெய்கைதானே ஸ்வரூபாநுரூபமென்கிறார். பாட்டினடியிலுள்ள உறுதாவது என்பதை, முடிவிலுள்ள ஆட்செய்வதே என்பதனோடு கூட்டுக; ஆட்செய்வதே உறுவதாவது என்றபடி.
எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் இத்தனையும் தன்பால் மறுவில் முர்த்தியோடொத்து இத்யாதி. இந்திரன் சந்திரன் குபேரன் என்று சொல்லப்படுகிற ஸகல தேவதாவர்க்கமும், ஸமஸ்த லோகங்களும், மற்றுமுண்டான சேதநாசேதவர்க்கமுமான இவையாகப் பெற்ற எம்பெருமான் திருக்குருகூரிலே நின்றருளிகிறானாகையாலே அவனுக்கு ஆட்செய்வதே உறுவது என்றபடி.
மறுவின்மூர்த்தி யென்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர்; மறு என்று ஸ்ரீவத்ஸத்திற்கும் பெயராகையாலே அதனையுடைத்தான திருமேனி; (அல்லது) மறு என்று அவத்யமாய், அஃதில்லாத (ஹேயப்ரத்யநீகமான) திருமேனியென்னுதல்.
எவ்வுலகங்களும் மற்றும் தன்னுடைய மூர்த்தியோடொத்திருக்கையாவது என்னெனில்; சரீரத்தினுடைய லக்ஷணம் இன்னதென்று அறிந்தால் இது அறிந்ததாகும்; …-யஸ்ய சேதநஸ்ய யத் த்ரவ்யம ஸர்வாத்மநா ஸவார்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தசசேஷதைகஸ்வரூபஞ்சஇ தத் தஸ்ய சரீரம்.* என்பது சரீர லக்ஷயம். ஆத்மாவுக்கு ஸகலப்ரகாரங்களாலும நியாம்யமாய் ஸேஷப்பட்டிருக்கையே சரீரத்வமாதலால் ஸகல தேவதைகளும் எம்பெருமானுக்கு இங்ஙனேயிருக்கும்படியைச் சொன்னவாறு.
செறு-விளைநிலம்.
குடக்கூத்தன்-அந்தணர்க்குக் செல்வம் விஞ்சினால் யாகஞ்செய்வது போல இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாக அவர்களாடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும். தலையிலே அடுக்குமிடமிருக்க இரு தோள்களிலும் இருகுடங்களிருக்க இருகையிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து இது.
English Translation
He contains within his faultless frame all gods, all worlds and all else. He resides in fertile Kurugur where paddy and sugarcane grow tall. He came as a manikin, he danced with an arracy of pots. Service to him alone is fit and proper
