(3324)

(3324)

மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்,

அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?

வெறித்துளவ முடியானே வினையேனை யுனக்கடிமை

அறக்கொண்டாய், இனியென்னா ரமுதே.கூய் அருளாயே.

 

பதவுரை

மறுக்கி

பயமூட்டி

வல் வலைபடுத்தி

தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து

குமைத்திட்டு கொன்று

சித்ரவதம் பண்ணி

உண்பர்

தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்;

அறம் பொருளை அறிந்து ஓரார்

தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை;

இவை என்ன உலகு இயற்கை!

வெறி துவளம் முடியானே

பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே

(இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி)

வினையேனை

பாவியான என்னை

உனக்கு அற

உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி

அடிமை கொண்டாய்

ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே!

என் ஆர் அமுதே

எனக்கு பரிபூர்ணமான அமுதமே!

இனி

உடனே

கூய் அருளாய்

அழைத்துக் கொண்டருள வேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மறுக்கிவல்வலைப்படுத்தி) பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோகயாத்ரையை நான் காணாதபடி என்னையழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார்.  ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச்செய்தேயும் லோகயாத்ரை யுள்ளது உள்ளபடியுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்கவேண்டும் படியிராநின்றது.

கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்கவெண்ணிச் சில உபாயங்கள் செய்வர்கள்; ‘உன்னை இன்னாரும் இன்னாருமாக இன்னபடி செய்யக் கோலியிருக்கிறார்கள்.  என்று சில பொய்களைச் சொல்லி அச்சமுறுத்தித் தங்களிடத்தே நம்பிக்கையுண்டாயப் பொருள்களையெல்லாம் தங்களிடத்திலேயே கொண்டுவைக்கும் படியாகச் செய்து இப்படியாக வலையிலே அகப்படுத்திக்கொண்டு மரணாந்தமான ஹிம்சைகளையும் பண்ணி வயிறு வளர்ப்பர்கள் ஸம்ஸாரிகள்; தேஹத்திற்காட்டில் வேறுபாட்டான ஆத்மவஸ்து ஒன்று இருக்கின்றதே; அது படும்பாடு என்னாகுமோ! என்று சிறிதும் ஆராய்வாரில்லை; இப்படி ஒரு லோகயாத்ரை யுண்டாயிருப்பதே! பிரானே. இக்கொடிய ஸம்ஸாரிக்ள நடுவே யிருக்கிற வென்னை உன்னுடைய பரமயோக்யதையைக்காட்டி ஏற்கனவே அடிமை கொண்டிருக்கிறாய்; இருந்தாலும். இந்நிலத்திலேயே இன்னமும் வைத்திடுவாயாகில் என்னை நீ அடிமை கொண்டதெல்லாம். பழுதாயொழியுமத்தனை; சப்தாதி விஷயப்ரவணராயிருக்கிற இவர்களிலே நானுமொருத்தனாய்த் தொலைந்து போவேனத்தனை; அங்ஙனம் போகாதபடி விரைந்து திருவடி சேர்த்துக்கொண்டருள வேணுமென்றாராயிற்று.

 

English Translation

They would forsake. Chain, beat, kill and eat, without ever realizing the truth, what ways are these?  O Lord of Tulasi crown, my ambrosia!  Sinner that I am, you changed me  and took me into service; now call to your feet

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top