(3322)

(3322)

கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக,

கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?

வள்ளலே மணிவண்ணா உனகழற்கே வரும்பரிசு,

வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே.

 

பதவுரை

கொள் என்று கிளர்ந்து எழுந்த

‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற

பெரு செல்வம்

பெரிய செல்வமானது

நெருப்பு ஆக

நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும்

(அதில் நசை யொழியாமல்)

கொள் என்று

அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக

தமம் மூடும்இ இவை உலகு இயற்கை என்ன

தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!

வள்ளலே

மஹாதாரனே!

மணி வண்ணா

நீலமணிவண்ணனே;

உன கழற்கே வரும் பரிசு

உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி

அடியேனே

அடியேன் விஷயத்தில்

வள்ளல் செய்து

ஔதார்யத்தைக் காட்டி

உனது அருளால்

உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்தஹேது என்பதைக் கட்கூடாகக் காணாநிற்கச்செய்தேயும், பின்னையும் மேல்விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோகயாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார். நெருப்புக்கு ஆச்ரயாசம் என்று பெயர்; தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது நெருப்பின் இயல்பு; அதுபோலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் காணநிற்கச் செய்தேயும்-என்பது முதலடியின் கருத்து. செல்வம் விஞ்சி ஜீவிக்கப் பெறுமவர்களை அச்செல்வமே காரணமாகப் பொறாமையாளர்கள் சித்திரவதம் செய்வது உலகவியறகையாதரால் ஆழ்வார் இங்ஙனே யருளிச்செய்தது மிகப் பொருந்தும்.

நெருப்பாக என்றவிடத்தில் தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும்.

கொள்ளென்று தமமுடும் =  “பகல்கண்ட குழியிலே இராவிழுவாரைப் போலே” என்று ஒரு த்ருஷ்டாந்தம் அடிக்கடி ஆசாரியங்களி ஸாதிப்பதுண்டு; அதாவது, ஓரிடத்தில் ஒரு பெரிய பள்ளமிருக்கும்; அதனைப் பகலில் நன்றாகக் கண்டிருக்கச் செய்தேயும் இரவில் இருளிலே செல்லும்போது ஸ்பஷ்டமாகக் காணாநிற்கச் செய்தேயும் மீண்டும் அதனையே கொள்ளும்படியாக இப்படியும்; ஒரு தமோகுணம்வந்து மூடுமோவென்று ஆழ்வார் வியக்கிறார். தமஸ் என்னும் வடசொல் தமமெனத்திரிந்தது.

வள்ளலே மணிவண்ணா =  வள்ளல் என்றால் தாராளமாகக் கொடுப்பவன் என்று பொருள்; எதைக்கொடுப்பவனென்னில், மணிவண்ணா! என்கிற பதச் சேர்த்தியினால் தனது திருமேனியையே முற்றுட்டாக அநுபவிக்கக் கொடுப்பவனென்பது பெற்ப்படம். “மாணிக்கப் பண்டாரத்தையிறே ஔதார்யம் பண்ணிற்று” என்பது நம்பிள்ளையீடு.

 

English Translation

Great wealth kindles raging fires of desire, then wraps the world in a cover of darkness all around.  Benevolent gem-hued Lord, what ways are these?  Wean me by your grace, and gift me your feet

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top