(3223)

(3223)

பரிவின்றி வாணனைக் காத்தும் என் றன்று படையொடும் வந்தெதிர்ந்த

திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும் அங்கியும் போர்தொலைய,

பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத்

தரியி னை, அச்சுத னைப்பற்றி யானிறை யேனும் இடரிலனே.

 

பதவுரை

அன்று

முன்பொருகாலத்தில்

வாணனை

பாணாசுரனை

பரிவு இன்றி

வருத்தமின்றியே

காத்தும் என்று

‘காக்கக்கடவோம்’ என்று அபிமானித்து

படையொடுங்

ஆயுதங்களோடு கூட

வந்து எதிர்ந்த

வந்து எதிரிட்ட

திரிபுரம் பெற்றவனும்

த்ரிபுரதஹநம் செய்தவனான சிவபிரானும்

மகனும்

அவன் மகனான ஆறுமுகனும்

பின்னும்

அதற்குமேலே

அங்கியும்

அக்நியும்

போர்

போர்க்களத்திலே

தொலைய

பங்கமடையும்படி,

பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை

பொருநின்ற சிறகையுடைய பக்ஷிராஜனை கடத்திய ஆச்சர்ய சக்தியுக்தனும்

ஆயனை

கோபாலக்ருஷ்ணனாய் அவதரித்தவனும்

பொன்சக்கரத்து

அழகிய திருவாழியையுடையவனாய்க் கொண்டு

அரியினை

விரோதிகளை அழியச் செய்பவனும்

அச்சுதனை

அடியார்களைக் கைவிடாதவனுமான எம்பெருமானை

பற்றி

அடைந்து

யான்

அடியேன்

இறையேனும்

சிறிதளவும்

இடம் இவன்

இடைஞ்சலுடையே னல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவர்கள் ரக்ஷகரல்லர் என்பதையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் கைவிடுவதில்லையென்பதையும் நன்கு காட்டிக்கொடுத்த எம்பெருமானைப் பற்றினவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்:- “கடைகிறபோது எட்டு வடிவு கொண்டுநின்ற கடைந்தாப்போலே த்ரிபுரதஹந மையத்திலே வில்லுக்குமிடுக்காயும் நாணிக்குத் திண்மையாயும் அம்புக்குக் கூர்மையாயும் தனக்கு அந்தராத்மாயும் எதிரிகளைத் தலைசாயும்படி பண்ணி த்ரிபுரத்தையழித்துக் கொடுத்தான். அத்தையறியாதே அஜ்ஞானவர்கள் இத்தை அவன் தலையிலே வைத்துக் கவிபாட இததைச் தானுங்கேட்டு, மெய்யிறேயென்று ‘அது செய்த நமக்கு இவனை வெல்லத்தட்டேன்?’ என்று வந்து எதிரிட்டானாயிற்று. – இத்தால் சொல்லிற்றாயிற்று. ருத்ரன் தன்னை அபாச்ரயமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஒடுகமென்னுமிடமும், ஸர்வேச்வரன் தன்னைப் பற்றினால் எல்லாவளவிலும் ரக்ஷிக்குமென்னுமிடமும்.”

“பற்றி யான்இறையேனுமிடரிலனே” என்ற விடத்து ஈடு:- பேரன் என்றிருக்கையாலே அநிருத்தாழ்வானுக்கு நாலுநாள் சிறையிலிருக்க வேண்டிற்று; அடியேனென்று பற்றினவெனக்கு அதுவும்வேண்டிற்றில்லை.”

 

English Translation

The left who rides the Garuda bird wields a golden discus.  He fought many wars against the mighty Bana, to protect the good Siva, Kumara and Agni, Praising him, “O Achyuta, Hari, Gopalal”, I have no despair.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top