(3181)
தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,
சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,
நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்
ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.
பதவுரை
|
தோற்றம் கேடு அவை |
– |
ஜனன மரணங்களாகிற அவைகள் |
|
இல்லவன் |
– |
இல்லாதவனும் |
|
உடையான் |
– |
அவற்றையுடையவனும் |
|
அவன் |
– |
ப்ரமாண ப்ரஸித்தனும், |
|
ஒரு மூர்த்தி ஆய் |
– |
ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய் |
|
சீற்றத்தோடு அருள் பெற்றவன் |
– |
சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்ராதன் |
|
அடி கீழ் புக நின்ற |
– |
தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும், |
|
செம் கண் மால் |
– |
சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும் |
|
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற |
– |
கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும் |
|
எம் வானவர் ஏற்றையே அன்றி |
– |
தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி |
|
எழுமைக்கும் |
– |
எல்லாக் காலத்திலும் |
|
மற்று ஒருவரை |
– |
வேறொருவரை |
|
யான் இலேன் |
– |
நான் புகலாகவுடையேனல் லேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆச்ரித விஷயத்தில் எல்லைகடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார். தோற்றாமாவது உற்பத்தி; கேடாவது விநாசம்; இவையிரண்டும் பகவத்ஸ்வரூபத்தில் இல்லாமையாலே தோற்றக்கேடவையில்லவன் என்றது. இவை ஸ்வரூபத்திலில்லாவிடினும், *எந்நின்றயோனியுமாயப் பிறந்தாய்* என்கிறபடியே ஸ்வேச்சையாலே பரிக்ரஹிக்கும் திருமேனிகளுக்கு உத்பத்தி விநாசங்கள் உள்ளனபோல் தோற்றுகையாலே ‘உடையான்’ என்றும் சொல்லிற்று. தோற்றக்கேடவையுடையான் என்றபடி. இப்பொருளைவிட, உடையான் என்றதற்கு ஸ்வாமியென்கிற பொருள் சிறக்கும்; இதுவே பதார்த்தங்களை யடையத் தனக்கு சேஷமாக வுடையான். நிருபாதிக சேஷி” என்பது ஈடு.
அவனொரு மூர்த்தியாய் கருமம் காரணமான பிறப்பு இல்லாதவன் அடியார்களுக்காக விகரஹ பரிக்ரஹம் செய்பவனாய் என்றபடி.
சீற்றத்தோடு அருள்பெற்றவன் = இது ப்ரஹ்லாதாழ்வானைச் சொன்னபடி; நரஸிம்ஹ பகவானுக்கு இரணியன்மேல் அளவு கடந்த சீற்றம் ஒருபுறம் செல்லா நிற்க, ப்ரஹ்லாதாழ்வான் குளிர்ந்த நோக்கத்திற்குப் பாத்திரமாயினன். – எம்பெருமானாரைச் சிலர் கேட்டார்களாம்; நரசிங்கமூர்த்திக்குச் சீற்றம் அளவுமீறிப் பொங்கிச் செல்லுகையில் சிறுக்கன் எங்ஙனே அணுகிநிற்கவல்லவனாயினன்? என்று. அதற்கு அவர் அருளிச்செய்தவிடை – “ஸிம்ஹம் ஆனைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ணலாம்படி யிருக்குமிறே” என்றாம். இவ்விடத்திற்குப் பொருத்தமாக “இழவுதரியாத தோரீற்றுப்பிடி யிளஞ்சீயந் தொடர்ந்து முடுகுதலும், குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொருங் கோவர்த்தன மென்னுங் கொற்றக்குடையே” என்ற பெரியாழ்வார் திருமொழி நோக்கத்தகும்.
செங்கண்மால் = இரணியன் பக்கல் சீற்றத்தாலும் கண் சிவந்திருக்கும்; ப்ரஹ்லாதாழ்வான் பக்கல் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கும். மால்=“மாலே பெருமை கருமை மையலுமாம்” என்ற நிகண்டின்படி பெருமையும் மையலும் இங்குக் கொள்ளத்தகும்: இரணியன் பக்கலில் பெருமை காட்டப்பட்டது; ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் மையல் காட்டப்பட்டது. (மையல்-வியாமோஹம்; அன்பு.)
நாற்றத்தோற்றமித்யாதி. சப்தாதி விஷயங்கள் ஸம்ஸாரிகளுக்கு வேறாயிருக்கும்; தமக்கு அவையெல்லாம் எம்பெருமானேயா யிருப்பன் என்கிறது.
English Translation
Through seven lies I have none but my Krishna, He is my smell and form and taste and sound and touch. The birthless, deathless, Lord with lotus eyes came as a big man-lion and gave refuge to Prahiada, the child-devotee of his feet.
