(3062)

(3062)

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,

பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,

கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

 

பதவுரை

எம்பெம்மானை கூறுதல்

எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது

கோணை பெரிது உடைத்து

மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்)

ஆண் அல்லன்

ஆணுமல்லன்,

பெண் அல்லன்

பெண்ணுமல்லன்

அல்லா அலியும்

இவ்விரண்டுமல்லாத நபும்

அல்லன்

ஸயனுமல்லன்

காணாலும் ஆகான்

கண்ணாற் பார்க்கவும் முடியாதவன்

உளன் அல்லன்

உள்ளவனல்லன்

இல்லை அல்லன்

இல்லாதவனுமல்லன்

பேணுங்கால்

(அடியார்) விரும்பின காலத்து

பேணும் உரு ஆகும்

அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன்

அல்லனும் ஆம்

அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார். ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்-ஸகவஸ்து விலக்ஷணன் என்றபடி. ருக்வேத ஆரண்யகத்தில் ஓதப்பட்டுள்ளதையடியொற்றி இந்தப் பாசுரம். இப்பாசுரத்தை பட்டர் இங்ஙனம் உபந்யஸித்துக்கொண்டிருக்கையில் கேட்டிருந்த ஒரு தமிழன், உலகத்திலுள்ள பொருள்கள் ஸ்த்ரிலிங்கபும்லிங்க நபும்ஸகலிங்களிற் சேர்ந்தல்லது இருக்கமாட்டவே; எம்பெருமான் இந்த மூன்றுபடியிலும் சேர்ந்திலன் என்றால் சூத்யம் என்று சொன்னபடியாகுமே; பரப்ரஹமம் சூத்யம் என்றே ஆழ்வாரருளிச் செய்வது? என்று கேட்டானாம். அதற்கு உத்தரமாக பட்டர் அருளிச் செய்தது;- “ஸாமாந்யே நபும்ஸகம” என்றபடி “ஆணல்ல பெண்ணல்ல அல்லா வலியுமல்ல” என்று ஆழ்வார்அருளிச் செய்திருப்பா;. அங்ஙனன்றியே அல்லன் அல்லன் அல்லன் என்றே (ஆண்பாலுக்குரிய அன்விகுதியையிட்டு) அருளிச் செய்திருக்கையாலே ‘எம்பெருமான் ஸாமாந்ய புருஷனல்லன், புரஷோத்தமன்’ என்று தெரிவிக்கப் பட்டதாகாதோ? என்று. இதைப் கேட்டு அவன் மிகவுமுகந்தான்.

காணலுமாகான்-ஆண் பெண் அலி என்கிற இவற்றைக்காணும் பிரமாணங்களினால் காணக்கூடாதவன் என்க. “என்றேனும் கட்கண்ணாற்காணாதவவ்வுரு” என்கிறபடியே மாம்ஸக்கண்ணாற் காணமுடியாதவனென்றவாறு.

உளனல்லன் இல்லையல்லன்- நாஸ்திகர்களுக்கு நாஸ்தி யென்னலாம்படியிருப்பவன், ஆஸ்திகர்களுக்கு அஸ்தி யென்னலாம்படியிருப்பவன் என்றபடி. பேணுங்காற் பேணுமுருவாகும்-“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவந்தானே” என்கிறபடியே அவரவர்கள் விரும்புகிறபடி வடிவு கொள்பவன் என்கை. தேவகி முதலானவர்கள் தன்னை ஆச்ரயித்தால், அவர்களுகந்தபடியே அவர்கட்குப் பிள்ளையாய்ப் பிறப்பவன் என்னவுமாம். பேணுங்கால்-பிரார்த்திக்குமிடத்து, பேணுமுருவாகும்- மறைத்துக் கொள்ள வேண்டும்படியான உருவத்தோடு வந்து பிறப்பவன் என்றது மொன்று.

அல்லனும்ஆம்-பிறந்தவிடந்தன்னிலே விமுகரான கம்ஸ சிசுபாலாதிகளுக்குக் கிட்டவொண்ணாதவன். (ஆக இப்படிப்பட்ட) எம்பெருமானைக் கூறுதல் கோணை பெரிதுடைத்து-எம்பெருமானைத் துதிப்பது ச்ரமஸாத்யம்-ஒருவிதமர்கவும் சொல்லுவதற்கில்லை என்றபடி. கோணை-மிறுக்கு, ஆயாஸம்.

 

English Translation

My Lord is neither male nor female nor eunuch My Lord cannot be seen; he is not, nor non-existent.  He takes the form by which you wish to see him, but he is not it.  Describing my Lord is a veritable riddle indeed.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top