(3045)
இலங்கைசெற்றவனே! என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய்! என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே.
பதவுரை
|
இவள் |
– |
இப்பராங்குசநாயகி. |
|
இலங்கை செற்றவனே என்னும் |
– |
(என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள் |
|
பின்னும் |
– |
அதற்குமேலும் |
|
வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும் |
– |
வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள். |
|
உள்ளம் மலங்க |
– |
மனம் சுழலும்படி |
|
வெவ்வுயிர்க்கும் |
– |
உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்; |
|
கண் நீர் |
– |
கண்ணீரானது |
|
மிக |
– |
அதிகமானவாறே |
|
கலங்கி |
– |
(அதனால்) அறிவுகலங்கப் பெற்று |
|
நின்று |
– |
ஸ்தம்பித்து நின்று |
|
கைதொழும் |
– |
அஞ்ஜலிபண்ணா நின்றாள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அவளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக்கொண்டு ஒருவாறு தாரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.
இலங்கை செற்றவனே! என்னும் = என்னைப் போலே ஒரு பெண் பெண்டாட்டிக்கு உதவினவனல்லையோ நீ; அவளைப் பிரிந்து நைவ தம்சாந் ந மச கா ந் ந கீடாந் ந ஸாரியருபாந், ராகவோபநயேத் காத்ராத் த்வத்கதேநாந்தராத்மநா*” என்னும்படியிருந்தவனல்லையோ நீ; * மதுரா மதுராலபா கிமா ஹ மம பாமி நீ?*” என்று ஒரு குரங்கை உட்கார வைத்துக்கொண்டு வாய்வெருவினவனல்லையோ நீ என்று ஸ்ரீராம குணங்களைப் பலபடியாக எடுத்துரையாநின்றாள்.
பின்னும் வலங்கொள் புள்ளுயர்த்தாயென்னும் ஸ்ரீ நினைத்தபோதே அடியாரிருந்தவிடத்தே கொண்டுவந்து சோக்கவல்ல பெரிய திருவடியை ஊர்தியாகவுடைய வனல்லையோ நீ என்னாநின்றாள். கொண்டுவருகைக்கு ஸாமக்ரியுண்டாயிருக்கச் செய்தேயும் வரக்காணாமையாலே நெஞ்சு கலங்கி நெடுமூச்செறியா நின்றாள்; கண்ணீரைத் தாரைதாரையாகப பெருகவிடா நின்றாள் கலங்கினாளாய்த் தொழுவதுஞ் செய்யா நின்றாள். இவள்படியோ இது! உன்படியோ உபேக்ஷை என்செய்வேனென்றாளாயிற்று.
கலங்கிக் கைதொழும் என்றவிடத்து, “தேறும் கலங்கியென்று தேறியும் தேறாதும் ஸ்வரூபங்குலையாது” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தியும் அதன் வியாக்கியானமும் நோக்கத்தக்கன.
English Translation
Her breath is hot, her heart is troubled, with beseeching hands and tears in her she calls “O Destroyer of Lanka” then, “O Rider of the bird!” softly.
