(3035)
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே.
பதவுரை
|
யார் |
– |
எப்படிப்பட்டவர்களுடையவும் |
|
ஞானங்களால் |
– |
ஞானவிசேஷங்களாலும் |
|
எடுக்கல் எழாத |
– |
க்ரஹிக்கப்பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத |
|
எந்தாய் |
– |
எம்பெருமானே ! |
|
கனிவார் |
– |
(உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு |
|
வீடு இன்பமே |
– |
மோக்ஷர்னந்தமே வடிவெடுத்தது போலிருப்பவனே |
|
கடல் படா |
– |
உப்புக்கடலிலுண்டாகாத |
|
என் அமுதே |
– |
எனக்கு போக்கியமான அம்ருதமே! |
|
தனியேன் |
– |
அத்விதீயபக்தனான என்னுடைய |
|
வாழ் |
– |
வாழ்ச்சிக்கு |
|
முதலே |
– |
முதற்காரணமே! |
|
பொழில் ஏழும் |
– |
ஏழுலகங்களையும் |
|
ஏனம் ஒன்று ஆய் |
– |
ஒப்பற்ற வராஹரூபியாகி |
|
நுனி ஆர் |
– |
கூர்மை மிகுந்த |
|
கோட்டில் |
– |
கோரப்பல்லிலே |
|
வைத்தாய் |
– |
வைத்தெடுத்தவனே! |
|
இனி |
– |
இது முதலாக |
|
உன பாதம் |
– |
உனது திருவடிகளை |
|
சேர்ந்தேனே |
– |
அடியேன்பிரியா திருப்பவனே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரளய வெள்ளத்திலே மூழ்கநின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸாரஸாகரத்திலே மூழ்கிக்கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனியுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார்.
‘பாசுரத்தின் தொடக்கத்திலுள்ள இனி என்பதற்கு இறுதியுலுள்ள வினை முற்றோடே அந்வயம் இனிச் சேர்ந்தேனேயென்க, ஆர்ஞானங்களால் எடுக்கலெழாத எந்தாய் = எப்படிப்பட்ட சிறந்த ஞானிகளுடைய ஞான விசேஷங்களாலும் தம் முயற்சியாலே அறியப் பார்க்குமிடத்தில் போக்கப் பேராதிருக்கிற என்னாயனே! என்கிறார். இந்த வாக்கியத்தில் உம்மை தொக்கியிருப்பதாகக் கொள்ளவேணும். ஆர்ஞானங்களாலும் என்க. எடுக்கலெழாத என்றவிடத்து, ஞானத்தினால் அறியக் கூடாதவன் என்கிற பொருள் போலவே தூக்கியெடுக்கவும் முடியாதவன்’ என்கிற பொருளும் விவக்ஷரிதம். இது அவதார சரீரத்திரங்களிற் காணத்தகும்.
கனிவார்வீட்டின்பமே! = இதற்கு மூன்றுவகையாகப் பொருள் கொள்ளலாம். வீட்டின்பமென்றது மோக்ஷஸிகமென்றபடியாய், உன் விஷயத்திலே உள் கனிந்து பாரிபக்குவர்களாயிருப்பார்க்கு மோக்ஷர்நந்த துல்யனாயிருப்பவனே ! ( அன்றியே) வீடு இன்பம்=வீடுகளிலே வந்து சேர்ந்து இன்பம் பயக்குமவன்; க்ருஷ்ணாவதாரம் முதலியவற்றில் நந்தகோபா; முதலானாருடைய க்ருஹங்களிலே வந்து “தொல்லையின்பத்திறுதி கண்டானே” என்னும்படி செய்பவன். (அன்றியே) வீட்டின்பமென்று அவரவர்களது க்ருஹங்களிலே அர்ச்சையாக அமைந்து இன்பம் தரும்படியைச் சொலலவுமாம், “வீட்டின்ப
வின்பப் பாக்களில் த்ரவ்யபாஷாநிரூபணஸமம் இன்பமாரியிலாராய்ச்சி” என்ற ஆசார்யஹ்ருதயகாராக்கு இவ்வர்த்தம் விவக்ஷரிதமிறே.
என்கடல்படாவழதே! = கடலில் தோன்றின அமுதம் ப்ராக்ருதமர்யும் ப்ரயந்த ஸித்தமர்யுமிருக்கும் அதுபோலன்றியே அப்ராக்ருதமர்ய் நிர்ஹேதுக க்ருபாப்ராப்தமர்யிருக்குந்தன்மை சொல்லுகிறது. (தனியேன் வாழ்முதலே!) ஆழ்வார்தம்முடைய வாழ்ச்சிக்குத் தம்மிடத்தில் ஒரு ஸிக்ருதம் காணாமல்
எம்n;பருமானே மூலஸிக்ருதமென்கிறார். “வரவாறொன்றில்லை வெறிதே யென்று அறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸிக்ருத மொழியக் கற்பிக்கலாவதில்லை” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸிக்தியுங்காண்க.
பொழிலேழுமேனமொன்றாய்க் கோட்டில் வைத்த வரலாறு;– ஹிரண்யகசிபுவின் உடன் பிறந்த வனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹாவராஹரூபியாகத் திருவவதாரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டு பொருது கோட்டி
னாற்குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.
English Translation
Lord beyond the ken of intellect, Sweet liberation, Ambosia, -untouched by the ocean, -for compassionate souls! You came as a boar and lifted the universe on you tusk teeth.
