(3007)
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே?
பதவுரை
|
மறப்பும் ஞானமும் ஒன்று : மறத்தலும் அறிதலுமாகிய ஒன்றையும் |
||
|
நான் உணர்த்திலன் |
– |
நான் அறியேன்; |
|
மறக்கும் என்று |
– |
(இப்படியிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து |
|
செந்தாமரை கண்ணோடு |
– |
செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களோடு |
|
மறப்பு அற |
– |
மறப்புக்கு அவகாசமில்லாதபடி |
|
என் உள்ளே |
– |
எனது நெஞ்சினுள்ளே |
|
மண்ணினான் தன்னை |
– |
நிலைபெற்றிருந்தவனான |
|
என் மணியை |
– |
எனது நீலரத்னமாகின எம் பெருமானை |
|
இனி யான் மறப்பேனா |
– |
இனி நான் மறப்பேனோ? (ஒருநாளும் மறவேன்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை மீட்டு அவனை மறந்திருத்தாலோவென்ன, தன்னை நான் மறவாமைக்காகத் தன்னுடைய அழகிய திருக்கண்களோடேகூட என்னுள்ளேபுகுந்து எனக்கு மிகவுமெளியனாய்க்கொண்டு ‘இனிப்பேரேன்’ என்றிருத்தருளினானாதலால் அவனை நான் மறக்கவிரகில்லையேயென்கிறார்.
மறப்பும் ஞானமும் நானொன்று உணர்த்திலன் = மறப்பென்றும் ஞானமென்றும் ஒன்றுமறிந்திலேன் நான். நான் ஒரு சேதநனாயிருந்து, நினைத்தது என் ஆதீனமாயிருந்தாலன்றோ மறப்பும் என்னதீனமாவது; அசித்கல்பனாயன்றோ நானிருந்தது. இப்படிப்பட்ட நான் நினைத்தேனாகவும் நினைவையும் தன் தலையிலே யேறிட்டு பிறந்தஞானத்திற்கு இடைவீடு வரவொண்ணாது’ என்று பார்த்து அழகிய திருக்கண்களாலே குளிர நோக்கிக்கொண்டு தன்னைப்பற்றி யெனக்குவரும் மறுப்புப் போம்படி என்னுள்ளத்தினுள்ளே நித்யவாஸம் பண்ணுகிறவனை எங்ஙனே மறப்பேன்?
ஈற்றடிக்கு ஈடுகாண்மின்-; “பெருவிலையனானரத்னம் கைபுகுந்தால் அத்தை முடிந்து அநுபவியாதே
