(2995)
கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பன்அவன் கண்களாலே,
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புல னுமவன்மூர்த்தி,
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி
அமலத்தெய்வத்தோடுலகம் ஆக்கியென்நெற்றியுளானே.
பதவுரை
|
கமலம் கண்ணன் |
– |
புண்டரீகாக்ஷன் |
|
என் கண்ணிணுளளான் |
– |
எனது கண்களுக்கு இலக்கானான்; |
|
காண்பன் |
– |
(நானும் அவனைக்) காணாநின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப்பெற்றேனென்னில்;) |
|
அவன் |
– |
அப்பெருமான் |
|
கண்களாலே |
– |
(தனது) திருக்கண்களாலே |
|
அமலங்கள் ஆக விழிக்கும் |
– |
அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப்பெற்றேனெக்க;) |
|
ஐம்புலனும் |
– |
மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும் |
|
அவன் மூர்த்தி |
– |
அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்) |
|
கமலத்து நம்பி அயன் தன்னை |
– |
தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும் |
|
கண் நுகலானொடும் |
– |
நெற்றிக்கண்ணனாகிய சிவபிரானையும் |
|
தோற்றி |
– |
தோற்றுவித்து (அவர்கள் முதலாக) |
|
அமலம் தெய்வத்தோடு |
– |
ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின |
|
உலகம் |
– |
உலகங்களையும்; |
|
ஆக்கி |
– |
படைக்குமவன் |
|
(ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்) |
||
|
என் நெற்றி உளான் |
– |
எனது நெற்றியிலே யானான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்; நானும் அவனை என் கண்களாற் காணப்பெற்றேன்; அவனும் தன்னுடைய குளிர்ந்தழகிய திருக்கண்களாலே என்னுடைய ஸகல தாபங்களும் தீரும்படி என்னைக் குளிர நோக்கியருளா நின்றான்; இப்படியே மற்றுமுள்ள செவி முதலிய காரணங்களாலும் அவனையே அநுபிக்கப்பெற்றேன். கண்ணுள்ளே அவன் வந்திருந்த இருப்பு எனக்கு ஸாத்மித்தவாறே பின்னை என் நெற்றியுள் நின்றருளினான் என்றாராயிற்று.
அமலங்களாக விழிக்கும் = இதுவரையில் அவனைக்காண முடியாதபடி தோஷங்கள் நிரம்பிக்கிடந்தன. அவை அவது கடாக்ஷவீக்ஷணமடியாக மாய்ந்தனவாதலால் இன்று காணப்பெற்றேன் என்று கருத்து.
ஐம்புலனும் அவன்மூர்த்தி = செவி வாய் கண் மூக்கு உடல் என்பன ஐம்புலன்கள்; முதலடியில் காண்பன் என்றமையால் கண் பகவத் விஷயத்திலே ப்ரவணாமனமை அங்கே சொல்லப்பட்டதாதலால் மற்ற நான்கு கரணங்களும் அந்தக் கண்போலவே அவ் விஷயத்திலேயே அவகாஹித்தமை சொல்லுதல் இங்கு விவக்ஷிதம். கீழ்நாள்களிலெல்லாம் :விஷயாந்தரங்களில் ஊன்றிக்கிடந்த கரணங்கள் யாவும் இன்று அவனிட்ட: வழக்காம்படி: அவனுக்கு விதேயமாய் அங்கே பணி போந்தனவென்கை.
English Translation
He created the lotus-born Brahma and the forehead-eyed Siva. He created the pure gods and all their worlds. I see the lotus-eyed Lord in my eyes, he too sees me clearly. He is in my forehead.
