(2980)

(2980)

வைகலும் வெண்ணெய், கைகலந்துண்டான்,

பொய்கலவாது, என் – மெய்கலந்தானே.

 

பதவுரை

வைகலும்

எப்போதும்

வெண்ணெய்

வெண்ணெயை

கை கலந்து

கை உள்ளளவும் நீட்டி

உண்டான்

(வாரியெடுத்து) அமுது செய்தவன்

பொய்நல வாது

மெய்யாகவே

என் மெய்

எனது மேனியிலே

கலந்தான்

ஒன்றுபடக்கூடினான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். இப்பாட்டில் பின்னடிகளே முக்கியமானவை; அதிற்சொல்லும் விஷயத்திற்கு த்ருஷ்டாந்தம் காட்டுவன முன்னடிகள். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு.

பொய்கலவா = அவப்தஸமஸ்தகாமனும் அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைகதாநனுமான ஸர்வேச்வரன் உம்முடைய அழுக்குடம்பிலே கலந்தானென்றால் இது நம்பத்தகுந்ததோவென்று சிலர் ஸந்தேஹிக்கக்கூடுமென்று கருதி ஸத்யமிட்டுச் சொல்லுகிறார்போலும்.

 

English Translation

Without a doubt the Lord who stole butter, and ate with both hands, is blended in me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top