(2841)
அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்
முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த
அடியர்க் கமுதம் இராமா னுசனென் னை ஆளவந்திப்
படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.
பதவுரை
|
அன்று |
– |
முற்காலத்தில் |
|
அடியை தொடர்ந்து |
– |
திருவடிகளை அவலம்பித்து |
|
எழும் |
– |
செருக்கிக்கிளர்ந்த |
|
ஐவீர்கட்கு ஆய் |
– |
பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷபாதம் பூண்டு) |
|
பாரதப் போர் |
– |
பாரதயுத்தத்திலே |
|
முடிய |
– |
(துரியோதநாதிகள்) மாளும்படியாக |
|
பரி நெடு தேர் |
– |
குதிரை பூண்ட பெரிய தேரை |
|
விடும் |
– |
நடத்தின |
|
கோனை |
– |
ஸர்வேச்வரனை |
|
முழுது உணர்ந்த |
– |
(ஸ்வரூப ஸவபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத்தெரிந்து கொண்ட |
|
அடியர்க்கு |
– |
பாகவதர்களுக்கு |
|
அமுதம் |
– |
பரமபோக்யமான |
|
இப்படியில் |
– |
இப்பூமண்டலத்தில் |
|
வந்து பிறந்தது என்னை ஆள |
– |
வந்து அவதரித்தது (எதற்காகவெனில்) அடியேனை ஆட்கொள்ளுகைக்காகவேயாம்; |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை – ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.
English Translation
Then in the yore the lord drove the steed-driven chariot for the five devoted Pandavas in the Bharata war. Now he has taken birth again as Ramanuja, the sweet ambrosia of devotees, for my upliftment alone, I can see no other reason.
