(2841)

(2841)

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட் காய்அன்று பாரதப்போர்

முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமா னுசனென் னை ஆளவந்திப்

படியிற் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே.

 

பதவுரை

அன்று

முற்காலத்தில்

அடியை தொடர்ந்து

திருவடிகளை அவலம்பித்து

எழும்

செருக்கிக்கிளர்ந்த

ஐவீர்கட்கு ஆய்

பஞ்ச பாண்டவர்களுக்காக (பக்ஷபாதம் பூண்டு)

பாரதப் போர்

பாரதயுத்தத்திலே

முடிய

(துரியோதநாதிகள்) மாளும்படியாக

பரி நெடு தேர்

குதிரை பூண்ட பெரிய தேரை

விடும்

நடத்தின

கோனை

ஸர்வேச்வரனை

முழுது உணர்ந்த

(ஸ்வரூப ஸவபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) பூர்த்தியாகத்தெரிந்து கொண்ட

அடியர்க்கு

பாகவதர்களுக்கு

அமுதம்

பரமபோக்யமான

இப்படியில்

இப்பூமண்டலத்தில்

வந்து பிறந்தது என்னை ஆள

வந்து அவதரித்தது  (எதற்காகவெனில்) அடியேனை ஆட்கொள்ளுகைக்காகவேயாம்;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பார்த்திடில் மற்று காரணம் இல்லை    –    ஆராய்ந்து பார்க்குமளவில் இது தவிர வேறொரு காரணமில்லை.

 

English Translation

Then in the yore the lord drove the steed-driven chariot for the five devoted Pandavas in the Bharata war. Now he has taken birth again as Ramanuja, the sweet ambrosia of devotees, for my upliftment alone, I can see no other reason.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top