(2825)

(2825)

நயவேன் ஒரு தெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்

புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்

மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்

அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?

 

பதவுரை

ஒரு தெய்வம்

வேறொரு தெய்வத்தை

நயவேன்

விரும்பமாட்டேன்

நால்நிலத்தே

இவ்வுலகில்

சில மானிடத்தை

சில நீகமனிதர்களைக் குறித்து

புயலே என

‘மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி

கவி போற்றி செய்யேன்

கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்யமாட்டேன்;

பொன் அரஙகம் என்னில்

‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே

மயல் பெருகும்

அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற

இராமாநுசன்

எம்பெருமானாருடைய

மன்னா மா தாள மலர்

பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை

அயரேன்

மறக்கமாட்டேன்;

(ஆனபின்பு)

அயரேன்

கொடிய பாவங்கள்

என்னை

என்னை

இன்று

இன்று முதலாக

எவ்வாறு அடர்ப்பது

எப்படி ஆக்ரமிக்கக் கூடும்?

 

English Translation

I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, “O Cloud!” But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top