(2822)

(2822)

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த

அருந்தவன் எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.

 

பதவுரை

 

செறு கலியால்

(தரும நெரியைத் திரஸ்கரிக்கின்ற கைலினாலே

வருந்திய

துக்கப்பட்ட

ஞாலத்தை

பூமியை

வண்மையினால் வந்து எடுத்து அளித்த

தமதுநிர்ஹேதுக க்ருபையாலே வந்து உத்தரித்து ரக்ஷித்தவரும்

அரும் அளித்த

சரணுகதியென்கிற அரிய தபஸ்ஸை அநுஷ்டித்தவரும்

எங்கள்

எமக்கு ஸ்வாமியுமான

இராமாநுசனை

எம்பெருமானாரை

அடைபவர்க்கு

ஆச்ரயிக்கு மவர்களுக்கு

பொருந்திய தேசும்

ஸ்வரூபாது ரூபமான தேஜஸ்ஸூம்

பொறையும்

க்ஷமாகுணமும்

திறலும்

ஜிதேந்த்ரியத்வமாகிற பலமும்

புகழும்

கீர்த்தியும்

நல்ல திருந்திய ஞானமும்

பரம விலக்ஷணமான அறிவும்

செல்வமும்

பக்தியாகி றஸம்பத்தும்

சேரும்

தானே வந்துசேரும்.

 

English Translation

By the strength of his penance, our Ramanajua lifted and protected the world from the destructive power of Kali.  For those who attain him, the radiance of knowledge, proper understanding, tolerance, ability, fame, wealth, -all these will come of their own accord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top