(2821)

(2821)

ஆண்டிகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே!

ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம் இன்றோ ரெண்ணின்றியே

காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்

பூண்டவன் பாளன் இராமா னுசனைப் பொருந்தினமே.

 

பதவுரை

மனமே

நெஞ்சே!

நூள் ஆய்

நாள்களாகவும்

திங்கள் ஆய்

மாதங்களாகவும்

ஆண்டுகள் ஆய்

வருஷ்ங்களாகவும்

(இப்படி)

நிகழ்காலம் எல்லாம்

நடந்து செல்லுகிற ஸர்வ காலங்களிலும்

ஈண்டு பல் யோனிகள் தோறும

திரண்டு பல்வகைப்பட்ட யோனிக்ள தோறும்

உழல்வோம்

தட்டித்திரிந்த நாம்

இன்று ஒர் எண் இன்றியே

இன்று ஒரு நினைவு மில்லாதிருக்கச் செய்தே (அகஸ்மாத்தா)

காண்  தகு தோள் அண்ணல் தென் அத்தியூரர் கழல் இணைக்கீழ் பூண்ட அன்பு ஆளான் இராமாநுசனை பொருந்தினம்

கண்ணுரைக் காணத்தக்க  தோள்களையுடைய ஸ்வாமியான பேரருளாளனாடைய திரு வடிகளில் அன்பு பூண்ட எம்பெருமானாரைச் சேரப்பெற்றோம் (என்ன பாக்கியம்!,)

 

English Translation

O Heart! For so many days, months, yeas and ages without end. we have gone through so many births in so many wombs.  Today, without a second thought, we have fallen at the feet of Ramanuja who’s heart is filled with love for the benevolent-arms-Varadaraja, lord of Attigiri.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top