(2817)

(2817)

கொள்ளக் குறைவற் றிலங்கிக் கொழுந்துவிட் டோங்கியவுன்

வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்

வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளுற் றிரங்கும் இராமானுச! என் தனிநெஞ்சமே!

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!

கொள்ள குறைவு அற்று இலங்கி

கொள்ளக்கொள்ளக் குறையாமல் தானே விளங்கி

கொழுந்துவிட்டு ஓங்கிய

மேன்மேலும் இளகிப் பதித்து வளர்ந்திருப்பதான

உன் வள்ளல் தனத்தினால்

தேவரீருடைய ஔதார்ய குணத்தாலே

வல்வினையேன் மனம்

மஹாபாபியான எனது நெஞ்சிலே

நீ புகுந்தாய்

(தேவரீருடைய பெருமை பாராதே) வந்து புகுந்தருளிற்று;

இது

(வஸிஷ்டின் சண்டான க்ருஹத்தில் புகுந்தாற்போலே) புகுந்தவிது,

வெள்ளை

பரிசுத்தமாய்

சுடர் விடும்

பரிசுத்தமாய் விளங்காநின்றுள்ள

உன் பெரு மேன்மைக்கு

தேவரீருடைய ப்ரபாவத்திற்கு

இழுக்கு என்று

அவத்யாவஹம் என்று

என் தனி நெஞ்சம்

எனது துணையற்ற நெஞ்சானது

தள்ளுற்று இரங்கும்

தளர்ந்து ஈடுபடா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியேனுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார் விஷயத்திலே சுபலனாயிரப்பானொருவன்” என்கிற இவ்வளவையே கொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர் புகுந்தளிற்று: வஸிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்போல் தேவரீர் என் நெஞ்சில் புகுந்த விது, தேவரீருடைய பரிசுத்தமாய் விளங்கும் மஹிமைக்கு என்ன அவத்யத்தை விளைத்திடுமோவென்று அஞ்சாநின்றேன்,

 

English Translation

O Ramanuja! With a grace never disminishing in radiance but ever increasing in power, your dark-cloud like benevolence has entered and captivated my heart.  The silver lining on your greatness is not a blemish, yet I fear it in my heart!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top