(2814)
மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்
எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்
பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே.
பதவுரை
|
முன நாள்கள் எல்லாம் |
– |
கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம் |
|
பல்உடல் தொறும் |
– |
பலபல சரீரங்கள் தோறும் |
|
மொய்த்த வெம் தீ வினையால் மூத்து |
– |
ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதிக்ரூரமான கர்மத்தாலே கிழத்தனம் வருமளவும் வாஸஞ்செய்து |
|
அதனால் |
– |
அத்தாலே |
|
எய்த்து ஒழிந்தேன் |
– |
மிக்க பரிதாப மடைந்தேன்; |
|
பொய்தவம் போற்றும் புலைச் சமயங்கள் |
– |
கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள் |
|
நிலத்து அவிய |
– |
இந்நிலவுலகத்திலே வோற்றொழியும்படி |
|
கைத்த |
– |
நிரஸித்தருளின |
|
மெய் ஞானத்து |
– |
உண்மைஞான முடையரான |
|
இராமாநுசன் என்னும் கார்தன்னை |
– |
எம்பெருமானாராகிறகாள மேகத்தை |
|
இன்று கண்டு |
– |
இன்று அடியேன் ஸேவிக்கப்பெற்று |
|
உயர்ந்தேன் |
– |
சிறந்தவனானேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெடுநாளாக ஸம்ஸாரத்திலிருந்து பலபல கருமங்களைப்பண்ணி, அக்கருமங்களின் பலனாகப் பலபல பிறவிகளிற் பிறந்து படாதனபட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்; இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப்பூமியிலவதரித்துப் பல துர்மதங்களை வெறுத்தொழித்ததுபோல எனது கருமங்களையும் வேரறுத்தொழித்துத் தம்முடைய நிர்ஹேதுக்கக் ருபையாலே தம்மைக் காட்டியருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.
பொய்த்தலும் போற்றும் புலைச்சமயங்கள் = ராவண ஸம்ந்யாஸம், காலநேமிஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனாட்டிப்பார்களென்க. மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம ஸர்வவிஜ்ஞர்நம்”என்று ஸ்தாபித்தருளினவர்
English Translation
Those were days when, by the terrible deeds of sin committed, I took countless births, aged and tired. Now I have seen Ramanuja, pleasing like the dark cloud, and am saved, for the weeds out the lowly paths of false penance.
