(2814)

(2814)

மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்

எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள்நிலத்தவியக்

கைத்தமெய்ஞ் ஞானத்து இராமா னுசனென்னும் கார்தன்னையே.

 

பதவுரை

முன நாள்கள் எல்லாம்

கீழ்க்கழிந்த அநாதிகாலமெல்லாம்

பல்உடல் தொறும்

பலபல சரீரங்கள் தோறும்

மொய்த்த வெம் தீ வினையால் மூத்து

ஆத்மாவை மொய்த்துக் கொண்டிருக்கின்ற அதிக்ரூரமான கர்மத்தாலே கிழத்தனம் வருமளவும் வாஸஞ்செய்து

அதனால்

அத்தாலே

எய்த்து ஒழிந்தேன்

மிக்க பரிதாப மடைந்தேன்;

பொய்தவம் போற்றும் புலைச் சமயங்கள்

கபடமான அநுஷ்டாநங்களை நடத்திப் போருகிற நீச மதஸ்தர்கள்

நிலத்து அவிய

இந்நிலவுலகத்திலே வோற்றொழியும்படி

கைத்த

நிரஸித்தருளின

மெய் ஞானத்து

உண்மைஞான முடையரான

இராமாநுசன் என்னும் கார்தன்னை

எம்பெருமானாராகிறகாள மேகத்தை

இன்று கண்டு

இன்று அடியேன் ஸேவிக்கப்பெற்று

உயர்ந்தேன்

சிறந்தவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெடுநாளாக ஸம்ஸாரத்திலிருந்து பலபல கருமங்களைப்பண்ணி, அக்கருமங்களின் பலனாகப் பலபல பிறவிகளிற் பிறந்து படாதனபட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸந்நனாய்க் கிடந்தேன் நான்; இப்பொழுது பரம உதாரான எம்பெருமானார் இப்பூமியிலவதரித்துப் பல துர்மதங்களை வெறுத்தொழித்ததுபோல எனது கருமங்களையும் வேரறுத்தொழித்துத்  தம்முடைய நிர்ஹேதுக்கக் ருபையாலே தம்மைக் காட்டியருளக் கண்டு கிருதார்த்தனானேனென்கிறார்.

பொய்த்தலும் போற்றும் புலைச்சமயங்கள் = ராவண ஸம்ந்யாஸம், காலநேமிஜபம் முதலியவை போலே மதாந்தரஸ்தர்கள் க்ருத்ரிமமான ஆசாரங்களை அனாட்டிப்பார்களென்க. மெய்ஞ் ஞானத்திராமாநுசன் – “யதார்த்தம ஸர்வவிஜ்ஞர்நம்”என்று ஸ்தாபித்தருளினவர்

 

English Translation

Those were days when, by the terrible deeds of sin committed, I took countless births, aged and tired.  Now I have seen Ramanuja, pleasing like the dark cloud, and am saved, for the weeds out the lowly paths of false penance.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top