(2661)

(2661)

உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,

இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,

நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்

சொல்நன்றி யாகும் துணை.

 

பதவுரை

இரைக்கும் கடல்

கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே

கிடந்த

பள்ளிக்கொண்டிரா நின்ற

எந்தாய்

ஸ்வாமீ!

உரைக்கில்

ஆராய்ந்து சொல்லில்,

ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே

(நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?

எனது உயிர்க்கு

என் ஆத்மாவுக்கு

ஓர் சொல்

‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய’ என்கிற சரமச்லோகமாகிற ஒரு சொல்லாலே

நன்றி ஆகும் துணை

உதவிசெய்யும் துணையும்

உரைப்பு எல்லாம்

மற்றும் சொல்லப்படுகிற எல்லாவகையான துணையும்

நின் அன்றி மற்று இலேன் கண்டாய்

உன்னைத் தவிர வேறொருவரையும் உடையே னல்லேனுகாண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உரைக்கிலோர் சுற்றத்தார்.) எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயேகாண்” என்கிறார்.

“ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது “உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை. ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே – அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

 

English Translation

O Lord reclining in the roaring ocean!  Come to think, who are my friends? Who are my relatives? I have none to call save you. Every good world I utter in your praise is my soul’s companion.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top