(2363)
உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, – இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி.
பதவுரை
|
உணரில் |
– |
(அப்பெருமானை நாமாக) அறியப்பார்த்தாலும் |
|
உணர்வு அரியன் |
– |
(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே) |
|
உள்ளம் புகுந்து புணரிலும் |
– |
நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும் |
|
உண்மை காண்பு அரியன் |
– |
உள்ளபடி அறியக் கூடாதவன் |
|
இனி |
– |
இப்படியான பின்பு |
|
இணர் அணைய |
– |
பூங்கொத்துகள் தாழும்படியாக |
|
கொங்கு |
– |
தேனிலே |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
அணைந்து |
– |
வந்துகிட்டி (மதுவைப்பருகி) |
|
அறையும் |
– |
ரீங்காரம் செய்யப்பெற்ற |
|
தன் |
– |
குளிர்ந்த |
|
துழாய் |
– |
திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான |
|
கோமானை |
– |
அப்பெருமானை |
|
எங்கு |
– |
எவ்விடத்தில் |
|
அணைந்து |
– |
கிட்டி |
|
காண்டும் |
– |
காணக்கடவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில். “நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ!“ என்று வருந்தினார், இங்ஙனே நாம் வருந்துவது எதுக்கு? ஒருவர்க்கும் ஒருவகையாலும் அறியவெண்ணாதபடியன்றோ அப்பெருமானுடைய ஸ்வரூபமிருப்பது, விஷணம் அப்படியிருக்கும்போது வீணாக நெஞ்சை நொந்துகொள்வதில் பயனென்? இனி அவனை நாம் கிட்டிக்காணும் விரகு என்னோ! என்று தம்மில்தான் குழைகின்றார்.
‘உணரில் உண்மையுணர்வரியன், உள்ளம்புகுந்து புணரிலும் உண்மை காண்பரியன்‘ –நம்முடைய முயற்சியாலே அவனுடைய உண்மை காணமுடியாதது என்பது மாத்திரமேயல்ல, “தாம் தம் பெருமையறியார்“ என்றும் “தனக்குந்தன் தன்மையறிவரியான்“ என்றுஞ் சொல்லுகிறபடியே அவன்றனக்கும் அறிய நிலமல்லாத உண்மையை அவன்றானும் நமக்கு அறிவிக்கவல்லனல்லன் என்றவாறு.
இணர் –பூங்கொத்து. எங்கு –எவ்விதமாக என்றுமாம்.
English Translation
He is hard to compherend through evelatory texts. Though he is in our hearts, it is difficult to feel his presence there too. If that be the case, where indeed can we see the Lord who wears the bee-humming nectar-dripping cool Tulasi garland?
