(2208)

(2208)

பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்

கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,

மால்தேடி யோடும் மனம்.

 

பதவுரை

பதி

திருமலைத் திருப்பதியிலே

அமைந்து

வேரூன்றி நின்று

நாடி

எங்கேயென்று தேடிக்கொண்டு

பருத்து எழுந்த சிந்தை

மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய்

மதி உரிஞ்சி

சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு

வான்முகடு நோக்கி

(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு

(அங்கும் நில்லாமல்)

மால்தேடி

பரமபதநாதனைத் தேடிக்கொண்டு

கதிமிகுத்து ஓடும்

விரைவுமிகுந்து செல்லுகின்ற

மனம்

என்னெஞ்சமானது

அம்கோல் தேடி ஓடும்

அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற

கொழுந்து அது போன்றது

கொடியை ஒத்திரா நின்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார் இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்; அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்; விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.

முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய்  அன்று; பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும் எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கேயெங்கேயென்று திருமாலைத் தேடி அங்குத் தன் நினைவு தலைக்கட்டப்பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரகத்தையுடையதாகி மேலேமேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது; இஃது, அழகிய கொள்கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.

 

English Translation

The heart that longs for the Lord and dwells on his form in vekatam grows like a creeper that seeeks the support of well grown trees, and quickly climbs to touch the moon in the sky.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top