(1851)
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.
பதவுரை
|
துளக்கம் இல் சுடரை |
– |
ஒன்றாலும் அழிதலில்லாத ஒளியையுடையவனும் |
|
அவுணன் |
– |
(இரணியனென்னும்) அஸுரனுடைய |
|
உடல் |
– |
உடம்பை |
|
பிளக்கும் |
– |
பிளந்தொழித்த |
|
மைந்தனை |
– |
மிடுக்கையுடையவனும் |
|
அளப்பு இல் ஆர் அமுதை |
– |
அளவிடுதலில்லாத போக்யதையை யுடைத்தான அமிருதம் போன்றவனும் |
|
அமரர்க்கு அருள் விளக்கினை |
– |
நித்யஸூரிகளுக்கு அருள் செய்கின்ற விளக்குப் போன்றவனுமான பெருமானை |
|
பேரில் |
– |
திருப்பேர் நகரில் |
|
வணங்கிப்போய் |
– |
ஸேவித்து |
|
வெள்ளறை |
– |
திருவெள்ளறையிலே |
|
சென்று காண்டும் |
– |
சென்று தொழுவோம் |
English Translation
The light-eternal, my prince who tore into Hiranya;s chest, my ambrosia, light of the celestials, the abundant grace, -having worshipped him in Tirupper, we shall go and have thid Darshan in Tiruvellarai today
