(1830)

(1830)

உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,

கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,

திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,

அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.

பதவுரை

உலகு எழினையும்

ஸப்தலோகங்களையும்
உண்டு

(பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன்

ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல்

ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு

திருக்கண்வளர்ந்தருளி
உகந்த

திருவுள்ள முவந்த
கரு மாணிக்கம்

பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய
திண் திறல் மா கரி சேர்

மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற
திருமாலிருஞ்சோலை

திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற

நிற்பவனுமான
அண்டர் தம் கோவினை

தேவாதிதேவனை
என் ஆய் இழை

சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள்
இன்று

இப்போது
அணுகும் கொல்

கிட்டப்பெறுவளோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கருமாணிக்க மாமலையை – மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க.

“அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை – ஆய்தல் – ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials.  He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top