(1806)

(1806)

நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,

சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,

என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட,

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.


பதவுரை

தொண்டர்காள்

பகவத்பக்தர்களே!

நின்ற வினையும்

ஸஞ்சிதகருமங்களும்

துயரும்

ப்ராரப்தகருமங்களும்

கெட

ஒழியும்படியாக

மா மலர்

சிறந்த புஷ்பங்களை

ஏந்தி

எடுத்துக்கொண்டு

இரவும் பகலும் என்றும்

இரவும் பகலுமாகிய எக்காலத்திலும்

வரி வண்டு இசை பாட

வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும்

குன்றின் முல்லை

மலையிலுள்ள முல்லைப் பூக்கள்

மன்றிடை

வெளிநிலங்களிலே

நாறும்

கமழப்பெற்றதுமான

குறுங்குடி

திருக்குறுங்குடியை

சென்று

அடைந்து

பணிமின்

ஸேவியுங்கள்

தொழுமின்

அஞ்ஜலிபண்ணுங்கள்,

எழுமின்

(இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள்

 

English Translation

O Devotees! Destroy your past karmas and travails.  With fresh flowers culled from the mountains, -where night and day the inebriate bees sing over fragrant Mullai creepers, -come offer worship, serve and be elevated

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top