(1805)
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,
ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,
தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய்
நாரை பேடையொ டாடும் குறுங்குடியே.
பதவுரை
|
நம் தமர்காள் |
– |
நம்மோடொத்த பகவத்பக்தர்களே! |
|
நார் ஆர் இண்டை |
– |
நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும் |
|
நாள் மலர் |
– |
அப்போதலர்ந்த பூக்களையும் |
|
கொண்டு |
– |
ஏந்திக் கொ;ண்டு |
|
ஆரா அன்போடு |
– |
பரபக்தியுக்தராய்க் கொண்டு |
|
(எம்பெருமான் ஊர் அடைமின்கள்) |
||
|
வார்புனல் |
– |
நீண்ட நீர்நிலங்களிலே |
|
மேய்ந்து |
– |
இரைமேய்ந்து |
|
வயல் |
– |
வயல்களில் |
|
வாழும் |
– |
வாழ்கின்ற |
|
கூர் வாய் நாரை |
– |
கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள் |
|
பேடையோடு |
– |
பேடைகளுடனே |
|
ஆடும் |
– |
களித்துவர்த்திக்கப்பெற்ற |
|
குறுங்குடி |
– |
திருக்குறுங்குடியென்கிற |
|
எம்பெருமான் ஊர் |
– |
திவ்யதேசத்தை |
|
அடைமின்கள் |
– |
சென்று சேருங்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னைப்போலே பதியெபரவித்தொழுந் தொண்டர்களே! நல்ல புஷ்பங்களையும் தொடுத்த மாலைகளையும் கையிற்கொண்டு பரிபூர்ணபக்தியுடனே திருக்குறுங்குடியைச் சென்று சேருங்கள், அத்தலத்தில் அஃறிணைப் பொருள்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழுமாதலால் நீங்களும் அங்குச் சென்று வேண்டினபடி கிஞ்சித்கரிக்கப் பெற்றுக் களித்து வாழலாமென்றாராயிற்று.
தாரா – நீர்வாழ்பறவை.
English Translation
Devotees! With fresh flower garlands, and hearts filled with love, come to offer worship to the Lord in kurungudi where sharp-beaked water-egrets rejoice with their mates in fields filled with Tara water birds
