(1701)
மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
பதவுரை
|
கொடியோன் |
– |
கொடியவனான இராவணனுடைய |
|
இலங்கை |
– |
லங்காபுரியில் |
|
புகல் உற்று |
– |
பிரவேசிக்கவேண்டி |
|
(அதற்காக) |
||
|
மல்லை முந்நீர் |
– |
செழி்ப்பான கடலானது |
|
அதர் பட |
– |
வழிபடும்படியாக |
|
வரி வெம் சிலை |
– |
வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை |
|
கால் விளை வித்து |
– |
வளையச்செய்து |
|
கொல்லை விலங்கு |
– |
காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்) |
|
பணி செய்ய |
– |
கைங்கரியம் பண்ண |
|
தொல்லை மரங்கள் |
– |
பழைய மரங்களையும் |
|
புகப் பெய்து |
– |
கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு |
|
துவலை |
– |
திவலைகள் |
|
நிமிர்ந்து |
– |
கிளர்ந்து |
|
வான் |
– |
ஆகாசத்திலே |
|
அணவ |
– |
அளாவும்படியாக |
|
கல்லால் |
– |
மலைகளைக் கொண்டு |
|
கடலை |
– |
ஸமுத்ரத்தை |
|
அடைத்தான் |
– |
அணைசெய்த எம்பெருமானுடைய |
|
ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-. |
||
English Translation
Parting mighty ocean with arrows shot from his bow that spot hell-fire, He made the monkey clan build bridge on ocean to cross into Lanka Straight. Throwing mighty logs into ocean raising a splash of water high, Then with stones he made the bridge, now kannapuram O, let us worship!
