(1693)

(1693)

முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்,

வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,

எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,

கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே.

 

பதவுரை

முரியும்

கிளர்ந்து அலைகின்ற

வெண் திரை

வெளுத்த அலைகளையுடைய

முதுகயம்

ஸமுத்ரமானது

தீப்பட

தீக்கொளுவியெரியும்படி

முழங்கு அழல் எரி அம்பின்

ஒலியுடைய நெருப்பு எரியாநின்றுள்ள அம்புகளையுடைய

வரி கொள் வெம் சிலை

அழகியதாய்க் கொடிதாயிருந்துள்ளவில்லை

வளைவித்த

வளையச் செய்த

மைந்தனும்

மஹாவீரனான இராமபிரானும்

வந்திலன்

வரவில்லை;

என் செய்கேன்

என்ன பண்ணுவேன்? ;

எரியும்

பிரகாசித்துக்கொண்டிருந்த

வெம் கதிர்

ஸூர்யனும்

துயின்றது

அஸ்தமித்தான்;

பாவியேன்

பாவியான என்னுடைய

இணை நெடுங்கண் துயிலா

பெரிய இரண்டு கண்களும் உறங்குகின்றனவில்லை;

ஊழியின்

கல்ப காலத்திற்காட்டிலும்;

பெரியன

பெரியவையாயுள்ள

கரிய நாழிகை

இரவு நாழிகைகள்

கழியும் ஆறு அறியேன்

எப்படி கழியப் போகின்றனவோ அறிகின்றிலேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸூர்யனும் அஸ்தமித்து விட்டான்; இரவிலே உறக்கம் வரவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாவியேனுடைய கண்கள் உறங்குகின்றில; 1.“நீளிரவும், ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்” என்னுமாபோலே பிரளயராத்ரியினும் நெடுகிச் செல்கின்ற இவ்விராப்பொழுது எங்ஙனங் கழியப்போகின்றதோ அறிகின்றிலேன் என்கிறார் பின்னடிகளில்.

கரிய நாழிகை = இராப்பொழுதானது இருண்டு கறுத்திருப்பதனால் நாழிகையிலும் அக்கருமை ஏற்றிக் கூறப்பட்டது.  கரிய நாழிகை – கொடிதான நாழிகை என்னவுமாம்.

 

English Translation

The white frothing ocean is on fire, the Prince who shot fire arrows from his beautiful bow has not come, alas!  What shall I do? The bright sun has gone to sleep.  My beautiful large eyes do not go to sleep.  I know not how to pass the longer-than-an-era night.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top