(1679)
வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
வேதம் முதல் வன் |
– |
வேதங்களால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும் |
|
விளங்கு |
– |
(திருமேனியில்) விளங்குகின்ற |
|
புரி நூலன் |
– |
யஜ்ஞோபவீதத்தையுடையவனும் |
|
பலரும் |
– |
எல்லாரும் |
|
பாதம் |
– |
திருவடிகளை |
|
பரவி பணிந்து ஏத்தி |
– |
ஆச்ரயித்து வணங்கித் துதித்து |
|
காதன்மை செய்யும் |
– |
பக்தி பண்ணுதற்கு உரியனான |
|
கண்ணபுரத்தெம்பெருமானுடைய,- |
||
|
தாது |
– |
தாதுகளையுடைத்தாய் |
|
நறு |
– |
மணம்மிக்கதான |
|
துழாய் |
– |
திருத்துழாயிலே |
|
தாழ்ந்து |
– |
படிந்து |
|
(அந்த நறுமணத்தைக் கொணர்ந்து)- |
||
|
ஊதாய் கோல் தும்பீ!-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடத்தைக் கிடந்த குடமாடி, நீலார் தண்ணந்துழாய் கொண்டு என்னெறி மென்குழல்மேல் சூட்டீரே” என்று அவனுடைய திருத்துழாய்ப் பிரசாதத்தைக் கொணர்ந்து தன் தலையில் சூட்ட வேணுமென்று அபேக்ஷித்தாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி; இப்பரகால நாயகி அங்ஙனன்றிக்கே துழாயிற்படிந்து வந்து ஊதினாற்போது மென்கிறாள்.
English Translation
O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram,-He is first-cause Lord of the Vedas, he wears the Vedic thread, the world praises his feet, offering worship, filled with love, -come back and blow over me the pollen from his Tulasi wreath.
