(1533)
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே.
பதவுரை
|
மின்ன |
– |
(மேற்கே) மின்னல் கண்டவாறே |
|
பொன் |
– |
பொன்களையும் |
|
முத்தும் |
– |
முத்துக்களையும் |
|
அரி உகிரும் |
– |
சிங்கங்களின் நகங்களையும் |
|
புழை கைமா கரி கோடும் |
– |
த்வாரத்தையுடைய துதிக்கையையுடைத்தான பெரிய யானைகளின் கொம்புகளையும் |
|
தண் திரை உந்தும் |
– |
குளிர்ந்த அலைகளின் முகமாகக் கொழிக்கின்ற |
|
வியன் பொன்னி, திருநறையூர்-; |
||
|
மின் ஒத்த நுண் |
– |
மின்னல் போன்று அதிஸூக்ஷ்மமான |
|
மருங்குல் |
– |
இடையையுடையளாய் |
|
மெல் இயலை |
– |
ஸௌகுமார்யத்தை ஸ்வபாவமாக உடையளான பிராட்டியை |
|
திருமார்பில் |
– |
திருமார்பிலே |
|
மன்ன |
– |
பொருந்தும்படியாக |
|
தான் வைத்து உகந்தான் |
– |
தரித்துக்கொண்டு திருவுள்ளமுவந்திருக்கிற பெருமானுடைய |
|
மலர் அடியே |
– |
திருவடித்தாமரைகளையே |
|
நெஞ்சே! அடை-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிங்கங்கள் யானைகளோடே பொருது அவற்றின் கும்பஸ்தலங்களைக் கிழித்து உதிர்த்தமுத்துக்களையும் மலைகளிலுண்டான பொன்களையும் சிங்கநகங்களையும் யானைக்கொம்புகளையும் நீர்வாக்காலே கொணர்ந்துதள்ளிப் பெருகுகின்ற பொன்னியாறு பாயப்பெற்ற திருநறையூரில் *அகலகில்லேனிறையுமென் றலர்மேல் மங்கையுறைமார்பன் வாழ்கின்றான்; அன்னவனுடைய பொன்னடியே அடைநெஞ்சே.
English Translation
O Heart! Gold, pearls, tiger’s claws, ivory, all these are brought as gifts by the river karaveri in Tirunaralyur; the lord is pleased to keep his sweet companion, the lady Sri of lightning-thin waist, on his chest, Attain his flower-adored feet.
