(1534)
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே.
பதவுரை
|
சீர்தழைத்த கதிர் |
– |
அழகுமிக்க கதிர்களையுடைய |
|
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களினுடையவும் |
|
(அவற்றையடுத்து முளைத்த) |
||
|
செங்கமலம் |
– |
செந்தாமரைகளினுடையவும் |
|
இடை இடையில் |
– |
நடு நடுவே |
|
கரும்பு |
– |
கரும்புகளானவை |
|
ஓங்கி பார் தழைத்து |
– |
உயரவெழுந்து தரையிலே படியவளர்ந்து |
|
பயன் விளைக்கும் |
– |
பலன்களைக் கொடுக்கப்பெற்ற |
|
திரு நறையூர்-; |
||
|
கார் தழைத்த திரு உருவன் |
– |
காளமேகப்போன்ற திருமேனியை யுடையவனும் |
|
விண்ணவர் கோன் |
– |
தேவாதி தேவன் |
|
தார் தழைத்த துழாய் முடியன் |
– |
பூக்கள் நிறைந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனுமான |
|
கண்ணபிரான் |
– |
கண்ணபிரானுடைய |
|
தளிர் அடியே |
– |
தளிர்போன்ற திருவடிகளையே |
|
நெஞ்சே! அடை -. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கரும்புவிளையும் நிலதிலே கருப்பங்கட்டைகளை வெட்டிவிட்டுச் செந்நெலை நடுவர்கள்; செந்நெலுக்குக் களையாக இடையிலே தாமரை விளையும்; முன்பு வெட்டிப் போட்ட கருப்பங்கட்டைகளும் பழைய வாஸநையாலே எழும்; செந்நெற்பயிர் ஒங்கவேணுமென்று க்ருஷிபண்ணினால் அதற்குன்னே கரும்புகள் ஓங்கிப் பயன் விளைவிக்கும்படியான நிலவளம் பொருந்திய திருநறையூரில் எழுந்தருளிக்காளமேகத் திருவுருவனாய் நித்யஸூரிநாதனாய்த் துழாய்முடியனான எம்பெருமானுடைய பாதபல்லவங்களைப் பணி நெஞ்சே!
English Translation
O Heart! Beautiful ripe golden sheaves of paddy grow with red lotuses in between; rows of well-laid sugarcane in plantation grow tall, in Tirunaraiyur. The Lord of dark cloud hue, Lor of the celestials, krishna, wears a wreath of Tulasi, Attain his tender feet.
