(1518)

(1518)

மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்

தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை

தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை

நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

மான் கொண்ட தோல் மார்வில் மாணி ஆய்

கிருஷ்ணாஜினத்தை மார்பிலே தரித்த பிரமசாரியாகி

மாவலி

மஹாபலி பக்கலில்

மண்தான் கொண்டு

பூமியைத் தான் யாசித்துப்பெற்று

தாளால் அளந்த

திருவடிகளாலே ஆக்ரமித்துக் கொண்ட

பெருமானை

பெருமை பொருந்தியவனும்

தேன்கொண்ட சாரல்

தேனையுடைத்தான தாழ்வரைகளையுடைய

திருவேங்கடத்தானை

திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானை

நான் நாடி சென்று நறையூரில் கண்டேன்

தேடிக் கொண்டுபோய் திருநறையூரில் ஸேவிக்கப் பெற்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் சென்று நாடி = எம்பெருமான் என்னைப் பெறுதற்குப் பல அவதாரங்களெடுத்துத் தேடித்திரிந்தான்;  அக்காலங்களிலே நான் விமுகனாயிருந்திட்டேன்;  இன்று நான் அவனைத் தேடித்திரிய வேண்டிற்று; அறுகாதப் பயணம்போய்த் திருமலையுச்சியிலே காணவேண்டாமல், விடாய்த்த விடத்திலே தண்ணீர் குடிக்கப் பெறுமாபோலே திருநறையூரிலே காணப்பெற்றேன் என்கிறார்.

 

English Translation

The Lord wore a deerskin on his chest and went to Mabali as a manikin seeking a gift of land, then took the whole Earth.  He is the resident of nectar-groved Tiruvenkatam, searching for him everywhere I have found him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top