(1509)
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப் பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.
.
பதவுரை
|
முனி ஆய் வந்து |
– |
பரசுராம முனியாய்த் திருவவதரித்து |
|
மூவெழுகால் |
– |
இருபத்தொரு தலைமுறையளவும் |
|
முடி சேர்மன்னர் உடல் துணிய |
– |
முடியுடையரான க்ஷத்ரியர்களின் சரீரங்கள் தொலையும்படியாக |
|
தனி வாய் மழுவின்படை ஆண்ட |
– |
ஒப்பற்ற (கூர்மையான) வாயையுடைத்தான கோடாலிமைய ஆயுதமாகக் கொண்டவனும் |
|
தார் ஆர் தோளான் |
– |
மாலையணிந்த திருத்தோள்களையுடையனுமான பெருமான்,- |
|
வார் புறவில் |
– |
அகன்ற சோலைப்புறத்திலே |
|
ஒருபால் |
– |
ஓரிடத்தில் |
|
பனி சேர் முல்லை |
– |
குளிர்ந்த முல்லைப் பூக்களானவை |
|
பல் அரும்ப |
– |
(அவ்வூரிலுள்ள மாதர்களின் பற்கள் போன்று அரும்பு செய்யப்பெற்றதும் |
|
பானல் |
– |
கருங்குவளைப் பூக்களானவை |
|
(ஓருபால்) |
– |
மற்றோரிடத்தில் |
|
கண்காட்ட |
– |
(அந்த மாதர்களின்) கண்கள் போன்று அலரப் பெற்றதும் |
|
(ஒருபால்) |
– |
மற்றோரிடத்தில் |
|
நனிசேர் கமலம் |
– |
மிகுதியாகவுள்ள தாமரைப் பூக்களானவை |
|
முகம் காட்டும் |
– |
(அந்த மாதர்களின்) முகம் போன்று விகஸிக்கப் பெற்றதுமான |
|
நறையூர், நின்ற நம்பி-, |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஈற்றடியின முற்பகுதி “நனிசேர் வயலுள் முத்தலைக்கும்” என்றும் ஓதப்பட்டுவந்ததென்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தினால் வளங்குகின்றது. அப்பாடமே முதன்மையாக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது
English Translation
Lord of Naraiyur came then as the sharp axe-wielding Bhrigu Rama, Vanquished twentyone mighty kings, wore a Tulasi wreath on crown Fragrant Mullai flashing a smile, Panal flowers do beckon with them, Glory-lotus shows a face, in happy groves and fields everywhere
