(1489)
முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்
சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில்கூவும்,
நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே.
பதவுரை
|
முனை |
– |
போர்புரிவதில் |
|
ஆர் |
– |
பொருத்தமுடைய |
|
சீயம் ஆகி |
– |
நரஸிம்ஹமூர்த்தியாய்த் திருவவதரித்து |
|
அவுணன் |
– |
(இரணியனென்னும்) அசுரனுடைய |
|
முரண் மார்வம் |
– |
முரட்டு மார்பை |
|
புனை |
– |
அழகு பொருந்தி |
|
வாள் |
– |
ஒளிபொருந்திய |
|
உகிரால் |
– |
நகங்களினால் |
|
போழ்பட |
– |
இரண்டு பிளவாகும்படி |
|
ஈர்ந்த |
– |
கிழித்துப்போட்ட |
|
புனிதன் |
– |
பரமபவித்திரனான பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எது வென்றால்) |
|
குயில் |
– |
குயில்களானவை |
|
சினை ஆர் தேமா |
– |
தழைப்புவாய்ந்த தேன் மா மரங்களுடைய |
|
செம் தளிர் |
– |
சிவந்த தளிர்களை |
|
கோதி |
– |
கொந்தி |
|
கூவும் |
– |
கூவப்பெற்றனவும் |
|
நனை ஆர் சோலை சூழ்ந்து |
– |
பூ மொட்டுகள் நிறைந்திருக்கப்பெற்றனவுமான சோலைகளால் சூழப்பட்டு |
|
அழகு ஆய |
– |
ஆழகுடைத்தான |
|
நறையூர் |
– |
திருநறையூராம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நல்ல குரல்படைத்த ரஸிகர்கள் ஸ்ரீபாகவதம் ஸ்ரீகிஷ்ணுபுராணம் முதலியவற்றில் அவாஹித்து அநுபவித்து அவ்வர்த்தங்களை உபந்யஸிக்கின்றனர் திருநறையூரில் – என்பது பின்னடிகளின் உள்ளுறை.
English Translation
The Lord came as a man-lion, and fore into the chest of the asura with nails claws. He resides inNaraiyur where cuckoos in groves peck into the red growing tips of Mango trees.
