(1493)
பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே.
பதவுரை
|
பகு வாய் |
– |
பெரிய வாயை யுடையவளும் |
|
வன |
– |
மனக்கொடுமையை யுடையவளுமான |
|
பேய் |
– |
பேய்ச்சியாகிய பூதனையினுடைய |
|
கொங்கை |
– |
ஸ்தனத்தை |
|
சுவைத்து |
– |
உறிஞ்சி |
|
ஆர் உயிர் உண்டு |
– |
(அவளது) அருமையான உயிரை முடித்தவனும், |
|
புகு வாய் |
– |
(கம்ஸ னரண்மையினுள்ளே) நுழைய வேண்டிய வாசலில் |
|
நின்ற |
– |
(மதமூட்டி) நிறுத்தப்பட்டிருந்த |
|
போதகம் |
– |
(குவலயாபீடமென்னும்) யானை |
|
வீழ |
– |
சாகும்படியாக |
|
பொருதான் |
– |
போர்புரிந்தவனுமான பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
அன்னம் |
– |
ஹம்ஸங்களானவை |
|
நெகு வாய் நெய்தல் பூ |
– |
அலர்ந்த வாயையுடைய (விகஸித்த) கரு நெய்தற் பூக்களிலே |
|
மது |
– |
தேனை |
|
மாந்தி |
– |
பருகி |
|
கமலத்தின் நகு வாய் மலர்மேல் |
– |
விரிந்த வாயையுடைய தாமரைப்பூக்களிலே |
|
உறங்கும் |
– |
கண்வளரப்பெற்ற |
|
நறையூர் |
– |
திருநறையூர் |
English Translation
The Lord drank the breast of the wide-gaping ogrees Putana, them smote an elephant and killed it. He resides in Naraiyur where swans drink nectar from wide-gaping blue lotus blossoms, then fall asleep before red lotuses.
