(1492)
விடையேழ் வென்று மென்தோ ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதனூர்,
பெடையோ டன்னம் பெய்வளை யார்தம் பின்சென்று
நடையோ டியலி நாணி யொளிக்கும் நறையூரே.
பதவுரை
|
ஏழ் விடை வென்று |
– |
ஏழெருதுகளை வலியடக்கி |
|
மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் |
– |
(மெல்லிய தோளழகை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகனானவனும் |
|
நின்ற மருதம் நடையால் சாய்த்த நாதன் |
– |
நிலைத்து நின்ற (இரட்டை) மருதமரங்களைத் தவழ்கிற நடையினாலே விழத்தள்ளினவனுமான எம்பெருமானுடைய |
|
ஊர் |
– |
திவ்யதேசம் (எதுவென்றால்) |
|
அன்னம் |
– |
ஹம்ஸங்களானவை |
|
பெடையோடு |
– |
(தமது) பேடைகளோடு கூடி |
|
பெய் வளையார் தம்பின் சென்று |
– |
செறிந்த வளைகளையணிந்த பெண்களின் பின்னேபோய் |
|
நடையோடு இயலி |
– |
(அவர்களுடைய) நடையை அநுஸரித்து நடக்கப்பார்த்து |
|
(அப்படி நடக்க முடியாமையினாலே) |
||
|
நாணி ஒளிக்கும் |
– |
வெட்கமடைந்து ஒளிக்குமிடமான |
|
நறையூர் |
– |
திருநறையூராம். |
English Translation
The Lord fought with seven bulls and embraced the slender-armed Nappinnai; he walked between Marudu trees and destroyed them. He resides in Naraiyur where graceful swan pairs go behind bangled dames vainly imitating thee gait, then hide themselves in shame.
