(1483)

(1483)

மின்னே ரிடையார் வேட்கையை மாற்றி யிருந்து,

என்னீ ரிருமியெம் பால்வந்த தென்றிக ழாதமுன்,

தொன்னீ ரிலங்கை மலங்க இலங்கெரி யூட்டினான்,

நன்னீர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

 

பதவுரை

மின் நேர்

மின்னல்போன்ற இடையையுடையரான மாதர் (முன்பு வைத்திருந்த) ப்ரீதியை
மாற்றி இருந்து

தீவிர்ந்தவர்களாய்க் கொண்டு
நீர்

(கிழவரான) நீங்கள்
இருமி

இருமிக்கொண்டு
எம்பால் வந்தது என் என்று

‘எங்களிடம் வந்தது ஏதுக்காக!’ என்று
இகழாத முன்

திரஸ்கரிப்பதற்கு முன்னே
தொல் நீர் இலங்கை

கடல்சூழ்ந்த லங்காபுரி
மலங்க

வியாகுலப்படும்படி
விலங்கு

(அனமானாகிற) வானர வீரனைக்கொண்டு
எரி ஊட்டீனான்

தீமூட்டிவிட்ட பெருமானுடையதாய்
நல் நீர்

நல்ல தீர்த்தங்களையுடைத்தான
நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே! எழு.-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூன்றாமடியின் பிற்பகுதியை ‘விலங்கெரி’ என்று மெடுக்கலாம், ‘இலங்கெரி’ யென்று மெடுக்கலாம். முந்தினதில், விலங்காலே எரியூட்டினான் – ஹநுமானாகிற சாகாமிருகத்தைக் கொண்டு தீக்கொளுவித்தவன் என்றதாம்.  பிந்தினதில், இலங்கு – ஜ்வலிக்கின்ற என்றபடி.  இதற்கு முன்பு அக்கினியானவன் இலங்கையினுட் புகுவதற்கு அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தான்; சோறு வேவப்பண்ணுகை முதலிய முக்கிய காரியங்களுக்கு வேண்டுமளவு புகுந்திருந்தான்; இராமபிரானால் நன்றாக ஜ்வலித்துக்கொண்டு எங்கும் புகுந்து உண்டுகளித்தானென்க.

English Translation

O Heart! Before lightning-thin-waisted dames change their affections and ask, “why did you come coughing so far?” and chatise, let us go to the Lord who burnt the ocean-girdled city of Lanka, -He resides in Naraiyur, -and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top