(1486)

(1486)

கனிசேர்ந் திலங்குநல் வாயவர் காதன்மை விட்டிட,

குனிசேர்ந் துடலம் கோலில் த்ளர்ந்திளை யாதமுன்,

பனிசேர் விசும்பில் பான்மதி கோள்விடுத் தானிடம்,

நனிசேர் நறையூர் நாம்தொழு தும்மெழு நெஞ்சமே.

பதவுரை

கனி சேர்ந்து

கோவைப்பழத்தோடொத்து
இலங்கு

விளங்காநின்ற
நல் வாயவர்

அழகிய அதரத்தையுடையரான பெண்கள்
காதன்மை விட்டிட

(வைத்திருந்த) ப்ரீதியை விட்டொழிக்கும்படியாக
உடலம்

சரீரமானது
குனி சேர்ந்து

கூன்வளைந்து
கோவில்

தடியோடுகூடி

தளர்ந்து இளையாத முன்-;

விசும்பில்

ஆகாசத்தில்
பால்

பால் போன்று
பனி சேர்

குளிர்ச்சி பொருந்தியவனான
மதி

சந்திரனுடைய
கோள்

துன்பத்தை
விடுத்தான்

போக்கின பெருமானுடைய
இடம்

இருப்பிடமாய்
நனி சேர்

பெருமை பொருந்தியதான
நறையூர்

திருநறையூரை

நாம் தொழுதும், நெஞ்சமே! எழு,-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நனிசேர்நறையூர் = (எம்பெருமானுக்கு) மிகவும் பொருந்தியிருக்கின்ற திருநறையூர் என்றுமாம்.

English Translation

O Heart! Before ripe-berry-lipped dames forsake their loves, the body become infirm and the back becomes bent with a staff to lean on let us go to the Lord who rid the Moon of his curse of waning –He resides in Narayiur,-and offer worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top