(1632)
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே.
பதவுரை
|
இமையோர் |
– |
தேவர்கள் |
|
நாளும் |
– |
நாள்தோறும் |
|
எந்தாய் என |
– |
எம்பெருமானே! என்று சொல்லி |
|
தொழுது |
– |
அடிபணிந்து |
|
ஏத்தும் |
– |
துதிக்கப்பெற்ற |
|
இடம் |
– |
திவ்யதேசமாய் |
|
எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர் |
– |
அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான |
|
சலசயனத்து |
– |
சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற) |
|
அம் தாமரை அடியாய் |
– |
அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே! |
|
நந்தா நெடு நரகத்திடை |
– |
அழிவில்லாத பெரிய நரகத்திலே |
|
நணுகாவகை |
– |
(நான்) சேராதபடி |
|
உனது அடியேற்கு அருள் புரி |
– |
உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும், |
English Translation
Gods in hordes everyday offer worship in Sirupuliyur Salasayanam were lotus grows in thickets. O Lord of lotus feet! Pray ensure that this devotee of yours does not enter eternal Hell.
