(1600)
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
பதவுரை
|
உடையானை |
– |
ஸர்வஸ்வாமியானவனும் |
|
ஒலி நீர் உலகங்கள் படைத்தானை |
– |
கடல் சூழ்ந்த உலகங்களைப் படைத்தவனும் |
|
அன்று |
– |
பாணாஸுர யுத்தத்தினன்று |
|
விடையான் ஓட |
– |
பரமசிவன் தோற்று ஓடும்படி |
|
விறல் ஆழி |
– |
வலிமிக்க திருவாழியை |
|
விசைத்தானை |
– |
வேகமாகப் பிரயோகித்தவனும் |
|
அடையார் தென் இலங்கை அழித்தானை |
– |
பகைவர் நிறைந்திருக்கிற தென்னிலங்கையை அழியச்செய்தவனும் |
|
அணி அழுந்தூர் உடையானை |
– |
அழகிய திருவழுந்தூரை இருப்பிடமாக வுடையனுமான பெருமானை |
|
அடியேன் அடைந்து-;- |
||
|
உய்ந்து போனேன் |
– |
உஜ்ஜீவித்து விட்டேன். |
English Translation
The master, the maker of the worlds, the wielder of the discus that pur the bull-rider Siva to flight, the destroyer of evil Lanka, resides in beautiful Alundur, I have seen him today.
