(1601)

(1601)

குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று

பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,

அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்

நின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.

 

பதவுரை

குன்றால்

கோவர்த்தந கிரியைக்கொண்டு

மாரி

பெருமழையை

தடுத்தவனை

தடை செய்தவனும்

குலம் வேழம்

சிறந்தகுலத்துப் பிறந்த கஜேந்திராழ்வான்

பொன்றாமை

(முதலைவாய்ப்பட்டு) முடிந்து போகாமல்

அன்று

அக்காலத்து

அதனுக்கு அருள்செய்த

அதற்கு அருள்புரிந்தவனும்

போர் ஏற்றை

போர் செய்யவல்ல காளை போன்றவனும்

ஆவின் நறு நெய்

பசுவின மண நெய்யை

அமர்ந்து உண்ண

விரும்பியமுதுசெய்ய

அன்று

அன்றேபிடித்து

அணி அழுந்தூர் நின்றானை

அழகிய திருவழுந்தூரில் நிற்பவனமான பெருமானை

அடியேன் கண்டுகொண்ட-;

நிறைந்தேன்

குறையற்றவனானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொன்றாமை – பொன்றுதல் – அழித்தல்.  அதனக்கு அருள்செய்த – அதுதன் கையிற் பறித்து வைத்துக்கொண்டிருந்த தாமரைப்பூவைத் திருவடிகளிலே ஸமர்ப்பிக்கப் பெற்றுக் கொள்வதாகிற அருளைச் செய்தவனென்க.  திருவாய்ப்பாடியின் ஸ்தானத்திலே திருவழுந்தூரைத் திருவுள்ளம் பற்றினானென்பது மூன்றாமடியின் கருத்து.

 

English Translation

The Lord who lifted a mount against a hailstorm, the Lord who saved the distressed elephant, the Lord who emerged victorious in war, the Lord who ate butter in stealth, resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top