(1606)

(1606)

பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்

வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,

ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,

காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.

 

பதவுரை

பேரானை

திருப்பேர்நகரில் பள்ளி கொண்டிருப்பவனும

குடந்தை பெருமானை

திருக்குடந்தையில் தன் பெருமைகளெல்லாந் தோற்ற சயனித் திருப்பவனும்

இலங்கு ஒளி சேர்

விளங்குகின்ற காந்தியோடு கூடின

வார் ஆர்

கச்சுநிறைந்த

வனம் முலையாள்

அழகிய முலைகளையுடைளான

மலர்மங்கை

பெரிய பிராட்டியார்க்கு

நாயகனை

வல்லபனும்

ஆரா இன் அமுதை

எவ்வளவு அநுபவித்தாலும் த்ருப்திபெறமுடியாத இனிய அமுதம் போன்றவனும்

தென் அழுந்தையில் மன்னி நின்ற-

கார் ஆர் கரு முகிலை

மழை காலத்துக் காளமேகம் போன்றவனுமான பெருமானை

கண்டுகொண்டு களித்தேன்-.

 

English Translation

The Lord of Tirupper, the Lord of kudandai, the Lord of lotus-dame Lakshmi, the insatiable ambrosia, is the dark-as-the-rain-cloud benevolent Lord.  He resides in beautiful Alundur, I have seen him today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top