(1607)
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.
பதவுரை
|
திறல் முருகன் அனையார் |
– |
வலிமையில் ஸுப்ரஹ்மண்யன் போன்றவாகள் நிறைந்த |
|
தென் அழுந்தையில், மன்னி நின்ற-; |
||
|
அறம் முதல்வனவனை |
– |
ஸகலதர்மங்களுக்கும் மூலகாரணமான பெருமாள் விஷயமாக, |
|
அணி ஆலியர் கோன் |
– |
அழகிய திருவாலிப்பதியிலுள்ளார்க்குத் தலைவராய் |
|
மருவார் |
– |
பகைவருடைய |
|
கறை |
– |
ரக்தக்கறையையுடைத்தான |
|
நெடுவேல் |
– |
நீண்டவேற்படையை |
|
வலவன் |
– |
ஆளவல்லவரான |
|
கலிகன்றி |
– |
ஆழ்வார் |
|
சொல் |
– |
அருளிச்செய்ய |
|
ஐ இரண்டும் |
– |
இப்பத்துப்பாசுரங்களையும் |
|
முறை வழுவாமை |
– |
முறைதப்பாமல் |
|
வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
|
வான் உலகு |
– |
பாரமபதத்தை |
|
முழுது |
– |
பூர்ணமாக |
|
ஆள்வர் |
– |
ஆளப்பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கறை நெடுவேல் – பகைவர்களைக் கொன்று ஏறின ரத்தக்கறையோடு கூடின வேற்படை. “தானுகந்த வூரெல்லாம் தன்தாள்பாடி” என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்கா யிருக்குமிவர்க்கு வேற்படையில் ரத்தக்கறை கழுவுவதற்கு அவகாசமில்லையாம்.
English Translation
This garland of songs by stained-spear-wielding Tiruvali King Kalikanri is on the first-cause Lord residing in Southern Alundur armid Subrahmanya like beautiful people. Those who master it will rule the whole sky-world.
