(1559)

(1559)

ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்

மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,

பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,

நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.

பதவுரை

ஓடா

நாட்டில் எங்கும் நடையாடாத
ஆள் அரியின் உரு ஆய்

நரஸிம்ஹரூபியாய்
என்றன் மாடே வந்து மருவி

என் பக்கல்வந்து பொருந்தி
அடியேன்

அடியேனுடைய
மனம்

மனத்தை
கொள்ள வல்ல மைந்தா

கவர்ந்து கொள்ளக் கூடிய மிடுக்கையுடையவனே!
ஓ நறையூர் நின்ற நம்பீ!- ;
பனுவல் கவிதை கொண்டு

இலக்கணம் வழுவாத கவிகளைக்கொண்டு
தொண்டர் தம்மை

நீசர்களை
பாடேன்

பாடுவது தவிர்ந்தேன்;
உன்னை அல்லால்

உன்னைத்தவிர (வேறொரு வரைக் கவிபாட)
நாடேன்

முயலமாட்டேன்.

 

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஹம்ஸாவதாரத்திலும் வராஹாவதாரத்திலும் தமது நெஞ்சு ஈடுபட்டு உருகினபடியைக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார்; நரஸிம்ஹாவதாரத்தில் ஈடுபாட்டை இப்பாட்டில் அருளிச்செய்கிறார்.  உலகத்தில் எங்கும் கண்டறியாத புதியதொரு பிறவி பிறப்பதே! ; மநுஷ்யனாகவாவது சிங்கமாகவாவது அவதரித்தாலாகாதோ? நரங்கலந்த சிங்கமென்று புதிதாகவொரு பிறவியைக் கற்பித்துக்கொண்டு அதிலே பிறந்த நீர்மை என்கொல்! என்று தமது திருவுள்ளம் ஆழ்ந்தமையை முன்னடிகளி லருளிச்செய்கிறார்.

“தாழ்ந்த ஜந்மத்திலே வேணுமாகில் பிறக்கிறாய்; நாட்டார் பிறக்கும் பிறவிகளைப் பிறக்கலாகாதோ?” என்பர் பெரியவாச்சான் பிள்ளையும்.

அடியேன் மனங்கொள்ளவல்ல மைந்தா! = பண்டு நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றினவன்று ப்ரஹ்லாதாழ்வானுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயென்பது உனக்கு ஒருமிடுக்கு அல்ல; கல்நெஞ்சனான என்னுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டதுவே உனக்குப் பெருமிடுக்குக் காண் ! என்பது உள்ளுறை.

இப்படிப்பட்ட அற்புத சக்திவாய்ந்த உன்னையல்லது மற்றொருவரையும் என் நாவினாற் பாட முயலவும் மாட்டேனென்கிறார்.  பின்னடிகளில்.  ‘தொண்டர்’ என்றது கூழாட்பட்டு நிற்பவர்களை.  “கவிதைப்பனுவல்” என்றதை “பனுவல் கவிதை” எனமாற்றி அந்வயித்துக்கொள்க.  சாஸ்த்ரோக்தமான லக்ஷணங்களில் குறையற்ற கவித்துவமென்றபடி.

 

English Translation

Taking a form of wonder-lion you came dearly into me! Through your love for me you made me your slave, O my Prince! No more can I sing in Praise of mortal beings with my songs!  Nor do I seek any other god. Naraiyur Lord-m-residence, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top