(1553)

(1553)

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,

முனியே திருமூழிக் களத்து விளக்கே,

இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே!

பதவுரை

பனி ஏய்

பனிமிக்கிருந்துள்ள
பரம் குன்றின்

சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற
பவளம் திரளே

பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே!
முனியே

(அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே!
திருமூழிக் களத்து

திருமூழிக்களமென்னுந் திருப்பதியில்
விளக்கே

விளக்குப்போல் விளங்குமவனே
இனியாய்

பரமபோக்யனே!
தொண்டரோம் பருகு

தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய
இன் அமுது ஆய

இனிய அமுதமானவனே!
கனியே

கனிபோன்றவனே!
உன்னை கண்டு கொண்டு

உன்னை ஸேவித்து
உய்ந்தொழிந்தேன்

உஜ்ஜீவிக்கப் பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பனி மிகுந்திருந்துள்ள இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலே எல்லார்க்கும் விரும்பவுரியனாய்க் கொண்டு ஸந்நிதிபண்ணி யிருக்குமவனே! என்பது முதலடியின் கருத்து.  இப்பெரிய திருமொழியில் இரண்டாந் திருப்பதிகத்தில் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற திருப்பதி இது.

முனியே! – மநநம் பண்ணுமவனே! என்கை.  இச்சேதநர் அறிந்த போதோடு அறியாதபோதோடு வாசியற எப்போதும் இவர்களுக்கு ஹிதத்தைச் சிந்திக்குமவனே! என்றவாறு.

திருமூழிக்களத்து விளக்கே! – திருமூழிக்களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயேப்ரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே! என்கை திருமூழிக்களம் – மனைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் ஒன்று; நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம்.

இனியாய்! – ‘இனியான்’ என்பதன் ஈறு திரிந்தவளி.  ‘இனியாய தொண்டரோம்’ என்பது வழங்கிவரும் பாடம்; அதுவியாக்கியானத்திற்குச் சேராது.

 

English Translation

O Coral spring residing in the snowy peaks of the Himalayas! O Thinker! O Light of Tirumulikkalam!  O Sweet ambrosia of devotees! O Fruit  By seeing you my spirk has been set free.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top