(1553)
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே!
பதவுரை
| பனி ஏய் |
– |
பனிமிக்கிருந்துள்ள |
| பரம் குன்றின் |
– |
சிறந்த ஹிமவத்பர்வதத்திலுள்ள திருப்பிரிதியி லெழுந்தருளியிருக்கிற |
| பவளம் திரளே |
– |
பவளங்கள் திரண்டாற்போன்று அழகியவனே! |
| முனியே |
– |
(அடியாருடைய நன்மைகளைச்) சிந்திக்குமவனே! |
| திருமூழிக் களத்து |
– |
திருமூழிக்களமென்னுந் திருப்பதியில் |
| விளக்கே |
– |
விளக்குப்போல் விளங்குமவனே |
| இனியாய் |
– |
பரமபோக்யனே! |
| தொண்டரோம் பருகு |
– |
தொண்டரான அடியோங்கள் பானம பண்ணுதற்கு உரிய |
| இன் அமுது ஆய |
– |
இனிய அமுதமானவனே! |
| கனியே |
– |
கனிபோன்றவனே! |
| உன்னை கண்டு கொண்டு |
– |
உன்னை ஸேவித்து |
| உய்ந்தொழிந்தேன் |
– |
உஜ்ஜீவிக்கப் பெற்றேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பனி மிகுந்திருந்துள்ள இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலே எல்லார்க்கும் விரும்பவுரியனாய்க் கொண்டு ஸந்நிதிபண்ணி யிருக்குமவனே! என்பது முதலடியின் கருத்து. இப்பெரிய திருமொழியில் இரண்டாந் திருப்பதிகத்தில் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற திருப்பதி இது.
முனியே! – மநநம் பண்ணுமவனே! என்கை. இச்சேதநர் அறிந்த போதோடு அறியாதபோதோடு வாசியற எப்போதும் இவர்களுக்கு ஹிதத்தைச் சிந்திக்குமவனே! என்றவாறு.
திருமூழிக்களத்து விளக்கே! – திருமூழிக்களத்திலே வந்து உன்னுடைய ஸ்வரூப ரூப குணங்களுக்கு நீயேப்ரகாசகனாய்க் கொண்டு நிற்கிறவனே! என்கை திருமூழிக்களம் – மனைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் ஒன்று; நம்மாழ்வாராலும் போற்றப்பெற்ற தலம்.
இனியாய்! – ‘இனியான்’ என்பதன் ஈறு திரிந்தவளி. ‘இனியாய தொண்டரோம்’ என்பது வழங்கிவரும் பாடம்; அதுவியாக்கியானத்திற்குச் சேராது.
English Translation
O Coral spring residing in the snowy peaks of the Himalayas! O Thinker! O Light of Tirumulikkalam! O Sweet ambrosia of devotees! O Fruit By seeing you my spirk has been set free.
