(1413)
ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய அடல்புரை யெழில்திகழ் திரடோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமர்சென் றிறைஞ்ச அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான் அரங்கமா நகரமர்ந் தானே.
பதவுரை
|
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய |
– |
ஆயிரம் மலைகள் நெருங்கச் சேர்ந்தாற்போலே இருக்கப் பெற்றவையும் |
|
அடல் புரை |
– |
யுத்தத்திற்குத் தகுதியானவையும் |
|
எழில் திகழ் |
– |
அழகு பொலிந்தவையும் |
|
திரள் தோள் ஆயிரம் திரண்டவையுமான |
– |
(கார்த்த வீர்யார்ஜுநனுடைய) தோள்களாயிரமும் |
|
துணிய |
– |
அறும்படியாக |
|
அடல் மழு பற்றி |
– |
தீக்ஷ்ணமான மழுப்படையைக் கையிற்கொண்டு |
|
மற்றவன் |
– |
அந்தக்கார்த்த வீரியார்ஜுநனை |
|
அகல் விசும்பு அணைய |
– |
விசாலமான வீரஸ்வர்க்கத்தை யடையச் செய்து (அதன் பின்) |
|
அமரர் |
– |
தேவர்கள் |
|
சென்று |
– |
கிட்டி |
|
ஆயிரம் பெயரால் இறைஞ்ச |
– |
ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லித் துதிக்க |
|
ஆலை கடல நடுவே |
– |
அலையெறிகின்ற ஸமுத்ரமத்யத்தில் |
|
சுடர் |
– |
ஒளிபொருந்திய |
|
ஆயிரம் வாய் |
– |
ஸஹஸ்ரமுகங்களையுடைய |
|
அரவு அணை |
– |
திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியிலே |
|
அறிது துயில் துயின்றான் |
– |
யோகநித்திரை பண்ணும் பெருமான் |
|
அரங்கம் மா நகர் அமர்ந்தான் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அகல் விசும்பு அணைய = பெருமான் கையினால் போரில் உயிர்துறந்தவன் வீரஸ்வர்க்கம் சேரக்கடவனென்க.
தேவர்களையும் உட்பட நலிந்துகொண்டு கொழுந்துக்கிடந்த இவன் மாண்டுபோகவே; பின்பு தேவர்கள் மனமகிழ்ந்து திருப்பாற்கடலிற் சென்று பெருமானைத் துதிக்கக் கேட்க வேணுமோ? அது சொல்லுகிறது பின்னடிகளில். திருவாய்மொழியில் “ஐந்துபைந்தலையாட ரவணைமேவிப் பாற்கடல் யோகநித்திரை, சிந்தைசெய்த வெந்தாய்” என்கிறார் நம்மாழ்வார்; இவர் “ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றான்” என்கிறார்; இவ்வெண்ணில் ஒரு நிர்ப்பந்தமில்லை; திருவனந்தாழ்வானுக்கு மகிழ்ச்சியின் மிகுதியினால் வாய்கள் பல்லாயிரமாகவும் பணைக்குமென்ப.
English Translation
The warrior king karttavirya Arjuna, with arms like a thousand peaks, fell to the sharp axe of the Lord Parasurama; his thousand arms were cut, and he went skyward. The Lord then, praised by the celestials with the chant of a thousand names, went to his abode in Milk Ocean, to recline on his thosuand-hooded snake. He is the resident of Arangama-Nagar.
