(1370)

(1370)

வெய்ய னாயுல கேழுடன் நலிந்தவன் உடலக மிருபிளவா,

கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ னே எனக் கருள்புரியே,

மையி னார்தரு வராலினம் பாயவண் தடத்திடைக் கமலங்கள்,

தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு வெள்ளறை நின்றானே!


பதவுரை

மையின் ஆர் தரு

கருநிறத்தினால் பூர்ணமான

வரால் இனம்

வரால் மீன்களின் திரள்

வண் தடத்திடை பாய

அழகிய தடாகங்களிலே துள்ளி விளையாடப்பெற்றதும்,

கமலங்கள் தெய்வம் நாறும்

தாமரைப் பூக்கள் திவ்யமான வாஸனை வீசாநின்ற

ஒண் பொய்கைகள்

அழகிய பொய்கைகளினால்

சூழ்

சூழப்பட்டதுமான

திருவெள்ளறை, நின்றானே!;

வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன்

மிகவும் க்ரூரனாயிருந்து கொண்டு ஸப்த லோகங்களையும் ஒருங்கே ஹிம்ஸித்துக்கொண்டிருந்த இரணியனுடைய

உடலகம் இரு பிளவு ஆ கையில்

மார்பு இரண்டு கூறாம்படி திருக்கைகளில்

நீள் உகிர் படை அது வாய்த்தவனே

நீண்ட நகங்களையே ஆயுதமாகப் பெற்றவனே!

எனக்கு அருள்புரி

அடியேன் மீது க்ருபை பண்ணவேணும்

 

English Translation

O Lord residing in Tiruvellarai, where schools of dark Varal-fish swim in lakes, where lotus flowers spread a divine fragrance! Then in the yore you came with sharp claws and fore the entrails of the fryrant who persecuted the seven worlds.  Pray grace me!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top