(1351)

(1351)

வெற்பால் மாரி பழுதாக்கி விறல்வா ளரக்கர் தலைவன்றன்,

வற்பார் திரள்தோ ளைந்நான்கும் துணித்த வல்வில் இராமனிடம்,

கற்பார் புரிசை செய்குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்,

பொற்பார் மாட மெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே!

 

பதவுரை

வெற்பால் மாரி பழுது ஆக்கி

கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும்

விறல் வாள் அரக்கர் தலைவன் தன்

பலிஷ்ட்டனான இராவணனுடைய

வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த

திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த

வல் வில்

வலிய சார்ங்கத்தையுடையவனான

இராமன் இடம்

இராமபிரான் வாழுமிடமாவது;-

கற்பு ஆர் புரிசை செய் குன்றம்

சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும்

கவின் ஆர் கூடம்

அழகிய க்ருஹங்களினாலும்

மாளிகைகள்

மாளிகைகளினாலும்

பொற்பு ஆர் மாடம்

அழகிய மண்டபங்களினாலும்

எழில் ஆரும்

சோபை பொருந்திய

புள்ளம் பூதங்குடி

 

English Translation

With a mountain He rendered the rains powerless; he is our bow-wielder Rama who felled the twenty arms of the mighty Rakasa king of Lanka city.  He resides in the well aid city of mountain like mansions, homes and Mandapas, -in Pullam-Budangudi, yes, always!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top