(1354)

(1354)

குடையா விலங்கல் கொண்டேந்தி மாரி பழுதா நிரைகாத்து,

சடையா னோட அடல்வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம்,

குடியா வண்டு கள்ளுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,

புடையார் கழனி யெழிலாரும் புள்ளம் பூதங் குடிதானே.

 

பதவுரை

விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி

(கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து

மாரி பழுது ஆ நிரை காத்து

மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்

சடையான் ஓட

ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்

அடல் வாணன் தட தோள்

செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை

துணித்த தலைவன் இடம்

அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;–

வண்டுகள் குடி ஆ உண்ண

வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி

கோலம் நிலம் மட்டு உகுக்கும்

அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற

புடை ஆர் கழனி எழில் ஆரும்

நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த

புள்ளம் பூதங்குடி

 

English Translation

Holding a mountain as an umbrella, the Lord Protected the cows against a rain. He let Siva flee with his retinue, and took only the arms of the warring Asura Bana. He resides, -where familes of bumble-bees hover over blue lily blossoms and drink their nectar in the ever-wet tanks, -in pullam-Budangudi, yes, always!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top