(1313)

(1313)

கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,

நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்

செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,

எல்லா இடரும் கெடுமா றருளாயே’

 

பதவுரை

கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்

கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!

நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்

விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்

திருவெள்ளக் குளத்து உறைவானே

திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!

செல்வா

செல்வனே!

எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய்

(எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.

 

English Translation

O Lord who parted the ocean with rock and sand, residing in Nangur with godly learned seers! Wealth of the residents, -Tinivellakulam Lord! Grace that I be rid of my karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top